Thursday, December 30, 2010

கொழும்பு நகரில் பாதுகாப்பு கமெராக்களின் செயற்பாடுகள் ஆரம்பம் !

 சி.சி.டி.வி கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை பல கோணங்களில் முழுமையாக கண்காணிக்கும் பணிகளை நேற்று(டிச29) பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
சி.சி.ரி.வி கெமராக்களின் கட்டுப்பாட்டு அறை பொலிஸ் நலன்புரி சங்க கட்டிடத் தொகுதியின் ஆறாவது மாடியில் அமைந்துள்ளது.
கொழும்பு நகரில் மொத்தமாக 105 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள அதேவேளை அவற்றின் ஊடான கண்காணிப்பு நடவடிக்கைகளை 28 திரைகளின் ஊடாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்வையிட முடியும். மேலும் பல நாட்களுக்கு இதன் காட்சிப் படங்களை சேகரிக்கும் தன்மையையும் இக் கெமராக்கள் கொண்டுள்ளன.
பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் தலைநகரில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள இப் பாதுகாப்பு நடவடிக்கை பொது மக்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.மேலும் இத்திட்டம் 227 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், வாகன நெரிசல்களை அவதானித்தல், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகளை கைது செய்கின்ற போது குற்றவாளிகளை பின்தொடர்தல், வாகனங்களை அடையாளம் காணுதல், விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை இந்த கெமராக்கள் மூலமாக துல்லியமாக அவதானிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா டெலிகொம், இலங்கை மின்சார சபை, மொரட்டுவைப் பல்கலைகழகம், மெட்ரோபொலிடன் நிறுவனம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவை பொலிஸ் திணைக்களத்திற்கு இத் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு வகையில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









logo design

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting