Thursday, January 6, 2011

என்ன அன்பு பாருங்கோ Vijay -Ajith விஜய் அஜித் சந்திப்பு ! படங்கள்


 வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.
ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் பண்டிகை – விசேஷங்களுக்கு கூடிக் குலவி நட்பு பாராட்டுகின்றனர்.
இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போது அதிமுக அனுதாபிகள் வேறு.
அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டனர்.
இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்போது மங்காத்தா பட இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தார்



logo design

புலிகளின் வீரம் . இலங்கை படையிடம் கெஞ்சும் புலி தளபதி ரமேஸ் (வீடியோ )




logo design

எங்களுடன்தான் அரசு பேச்சு நடத்தும் என்ற மாயப்பேயைக் காட்டித் தமிழ் மக்களை ஏமாற்ற பார்த்தவர்களுக்கு அரசு உள்ளித் தைலம் வைத்துள்ளது!

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அரசுடன் பேச்சு நடத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தெரிவித்ததன் அடிப்படையில் பேச்சு நடக்கப்போகிறது என்ற பிரமை தமிழ் மக்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இதனை மேலும் வலியுறுத்துவதாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அதனோடு தொடர்புடைய சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், பதின்மூன்றாவது திருத்தச் சட்ட மூலத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் ஹெகலிய கூறிய விடயம் சர்ச்சைக்குரியது என்பதில் சந்தேகமில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துத் தங்களுடன் மட்டுமே பேசப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துக் கூறி வருகின்றது.
அதேநேரம் இனப் பிரச்சினைக்காக தீர்வு பற்றித் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் அரசு பேசும் என அந்தக் தரப்பு நம்புகிறது. ஆக, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசு யாருடன் பேசும் என்பதைப் பொறுத்தே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர முடியும் எனத் தமிழ்த்தரப்புக் கருதுவதால் இப்படியொரு பிரசாரம்.
ஆனால், அரசு அதிரடியாக ஓர் அறிவித்தலை விட்டிருக்கின்றது. இந்த அறிவித்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சு நடத்தப்படும் என்பதாகும்.
எங்களுடன்தான் அரசு பேச்சு நடத்தும் என்ற மாயப்பேயைக் காட்டித் தமிழ் மக்களை ஏமாற்றப் பார்த்தவர்களுக்கு அரசு உள்ளித் தைலம் வைத்துள்ளது. இது ஒருபுறம்.
மறுபுறத்தில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்புடனும் பேச்சு நடத்தப்படும் என்றால், அந்த விரிபரப்பின் எல்லை எங்கே முற்றுப்பெறும்?
இனப்பிரச்சினையோடு தொடர்புடையவர்கள் என்றால் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் தொடர்புடையவர் அல்லவா?
ஏன்? இந்தியாவின் ரொமேஸ் பண்டாரியும், ஐ.நாவின் விஜய் நம்பியாரும் இனப்பிரச்சினையோடு தொடர்புடையவர்கள்தான். எப்படி பேச்சுவார்த்தை சாத்தியமாகும்?
இது பற்றித்தான் தமிழ்த்தரப்பு சிந்திக்க வேண்டும். இதை விடுத்து எங்களோடு… என்று மார் தட்டுவதில் எந்தப் பயனுமில்லை.


logo design

Tuesday, January 4, 2011

குடிகாரன் கூத்து


t - Wk">

logo design

Monday, January 3, 2011

தமிழக சினிமாவில் இருந்து புலிகளுக்கு புதிய தலைவன்

நிஜத்தில் போரிட்ட பிரபாகரன் அவர்களினால் ஈழ விடுதலையினை வென்றெடுக்க முடியாது போன காரணத்தினாலோ என்னவோ, தமிழ் ஈழ விடுதலை புலிகளின் புதிய தலைவராக சினிமாவில் இருந்து ஒருவரை புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தேர்தெடுத்துள்ளார்கள்.

ஈழத் தமிழர்களின் சார்பாக ராகுல் காந்திக்கு பதில் வழங்கும் அதிகாரத்தினை சீமானுக்கு யார் கொடுத்தது என்ற தலைப்பில் நெருப்பில் வந்த கட்டுரைக்கு பதில் வழங்கியுள்ள புலிகள் சார்பு இணையதளம் ஒன்று, தமது புதிய தலைவன் சீமான் குறித்து பேசுவதற்கு அர்சுணனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்டுள்ளது.

இது குறித்து நாம் புலிகளின் ஆதரவு மட்டத்தில் பேசிய பொழுது, ஆம் சீமான் அவர்களையே தமது புதிய தலைவராக நியமித்து உள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக உத்தியோகபூர்வமாக இதனை அறிவிக்கவில்லை என்றும் கூறினார்கள். இந்த தகவல் ஆனது உண்மையாக இருப்பின், இது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்.
ஏனெனில் சீமான் 30 நாட்களில் தமிழ் ஈழத்தினை தயாரித்து கொடுத்துவிடுவார். இதனை இரண்டரை மணித்தியாலத்தில் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர் பார்த்துவிட்டு பரவசம் அடைவார்கள்.
தமிழ் ஈழ விடுதலை புலிகளின் புதிய தலைவர் சினிமா இயக்குனர் சீமானா? என்ன கொடுமை சார்? அப்படியாயின் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் உருத்திகுமார் யார்? உருத்திரகுமாரை துரோகியென்று கூறிவரும் நெடியவன் குழுவினர் யார்?


logo design

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting