Friday, January 14, 2011

கிழக்கு மாகாண வெள்ள நிலைமை வீடியோ ! Flood terror in Akkaraipattu ,amparai , east Sri lanka


இலங்கை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை அக்கரைப்பற்று  வெள்ள நிலைமை வீடியோ

Flood terror in Akkaraipattu ,amparai , east Sri lanka



logo design

தலைவர் தோன்றும் புலிகளின் விமானங்கள் உருவாகிய விதம்! வீடியோ


விடுதலைப்புலிகளின் விமானங்கள் உருவாகிய விதத்தினைக் காண்பிக்கும் வீடியோ வடபகுதி மோதலின்போது இராணுவத்தினருடன் தங்கியிருந்து செய்திகளை வழங்கிய ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊடகவியலாளர் 
சமன்குமார விக்கிரமரட்னவினால் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை போட்டுக் காண்பிக்கப்பட்டது.




விடுதலைப்புலிகளினால் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஒளிப்பதிவு நாடாக்களை தான் வன்னியில் மீட்டதாக கூறியே சமன்குமார இந்த வீடியோவினை அங்கு காண்பித்தார்.

விடுதலைப்புலிகளால் பதிவு செய்யப்பட்டதாக கூறி சமன்குமாரவினால் காண்பிக்கபபட்ட அந்த ஒளிப்பதிவு தொகுப்பில் வெளிநாடு ஒன்றில் விமான உற்பத்தி நிறுவனம் ஒன்றின் சிறு விமானமொன்று தயாரிக்கப்பட்டு அதன் பாகங்கள் பொருத்தப்பட்டு விமானம் முழுவடிவத்தினைப் பெறுகின்றது. பின்னர் அந்த விமானம் பலபாகங்களாகப் பிரிக்கப்பட்டு கொள்கலன் ஒன்றில் அடைக்கப்படுகிறது. அந்த விமானம் நீலம் வெள்ளளை நிற வர்ணத்தில் அமைந்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டவர் இருவருடன் ஆசியாவைச் சோ்ந்த இருவர் உள்ளனர். அவர்களை விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர்களென சமன்குமார இதன்போது குறிப்பிட்டார்.
பின்னர் இந்தக் கொள்கலனில் விமானம் அடைக்கப்பட்டது. அந்தக் கொள்கலன் பின்னர் வன்னிப்பகுதியில் பிரிக்கப்பட்டு விமானத்தின் பாகங்கள் பொருத்தப்படுகின்றது. விமானம் முழுவடிவம் பெற்று அது பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றது.

வீதியொன்றில் இது பரீட்சித்துப் பார்க்கப்பட்டு விமானம் பறக்கின்றது. இந்த வீதியை ஏ 9 வீதியென சமன்குமார குறிப்பிட்டார். பின்னர் விமானத்தை நிறுத்துவதற்குரிய கூடாரம் அமைக்கப்பட்டு அதனுள் நிலத்தடி அறைகள் அமைக்கப்படுகின்றது. விமானத்திற்கு பச்சை நிற வர்ணம் பூசப்பட்டு அது இராணுவ போர் விமானங்கள் போல காட்சி தருகின்றது.

அதன் பின்னர் விமானம் வானில் பறக்க விடப்படுகின்றது. இவ்வாறு பறக்க விடப்பட்டு விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோக்களில் கீழே காடு போன்று பச்சைப் பசேல் என்ற இடம் தெரிந்தது. பின்னர் காடாக இருந்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு விமான ஓடுபாதை அமைக்கப்பட்டு அதற்குரிய சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டது.

இதன்பின்னர் சர்வதேச விமான ஓடுபாதைகளை ஒத்த ஓடுபாதையில் அந்தச் சிறுவிமானத்தை சீருடை அணிந்த இருவர் இயக்கிப் பறக்கின்றனர். விமான ஓடுபாதை அமைந்த பகுதியை முல்லைத்தீவு எனவும் விமானத்தை இயக்கியவர்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனவும் சமன்குமார குறிப்பிட்டார்.

பின்னர் அந்த விமானங்கள் கொழும்பில் தாக்குதல் நடத்தியபோது ராடர் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் சமன்குமார காண்பித்தார். அவற்றை விடுதலைப்புலிகளின் ஒளித்தொகுப்புடன் தான் இணைத்ததாகவும் சமன்குமார தெரிவித்தார்.

எனினும் இந்த வீடியோ இங்கு முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




logo design

Thursday, January 13, 2011

தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் - அவுஸ்திரேலிய வெள்ளத்தில் மற்றுமொரு அவலம்

logo designஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தம்பியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளான். 

ஜோர்டன் ரைஸ் என்ற 13 வயதான அச்சிறுவன், தனது தாயார் மற்றும் 10 வயதான சகோதரனுடன் காரில் பயணம் செய்துள்ளான்.

கார் இடை நடுவே வெள்ளத்தில் நிற்கவே உடனே அவசர உதவிச் சேவைக்கு அழைப்பினை மேற்கொண்டு இவர்கள் மூவரும் காரின் மேலே உட்கார்ந்துள்ளனர். உடனே இவர்களை சிலர் காப்பாற்ற முயன்றுள்ளனர். 

இதன் போது முதலில் ஜோர்டனை காப்பாற்ற அவர்கள் முயன்ற போது அவன் தனது தம்பியைக் காப்பாற்றும்படிக் கூறியுள்ளார். 

அவர்கள் தம்பியை ஒருவாறு காப்பாற்றியதன் பின்னர் ஜோர்டனையும் அவனது தாயாரையும் காப்பாற்ற முற்பட்ட போது வெள்ளத்தின் வேகம் அதிகரிக்கவே கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி சம்பவமானது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சிறுவனின் தந்தை தனது மகனை நினைத்து பெருமையடைவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கட்டுநாயக்கவில் கடத்தல்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று முன்னதினம் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுள் இங்கிலாந்தில் இருந்து வந்திறங்கும் போது, அவர் கடத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த பொலிஸில் முறையிடவும் கடத்தப்பட்ட மாணவரின் பெற்றோர் பீதியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி இங்கிலாந்து சென்றிருந்த போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலாவது ஆர்ப்பாட்டம் லண்டன் விமான நிலையத்தில் சில மாணவர்களால் நடத்தப்பட்டது. 

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் புகைப்படங்களையும், விபரங்களையும் விரைவில் தமக்கு வழங்குமாறு இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரசன்ன சில்வாவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். 

அதன் பின்னர் தாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பின்னர் தெரியப்படுத்துவதாகவும், ஜனாதிபதி அங்கு பாதுகாப்பு தரப்பினரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. 

தற்போது குறித்த மாணவர் கடத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக லங்கா நியூஸ் வெப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள




logo design

502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு…??? (In detail) // உதவிக்கரம் நீட்டுமாறு அரசாங்கம் கோரிக்கை…!!!

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முடியுமானால் உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி ராஜகருண கருத்து வெளியிடுகையில் :
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முடியுமானால் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அதாவது நிதியுதவி செய்ய விரும்புபவர்கள் இலங்கை வங்கியின் டொரிண்டன் கிளையின் 0007040166 என்ற கணக்கு இலக்கத்துக்கு வைப்புச் செய்யலாம். அல்லது  0112681983  0112681983 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு நிதியுதவியை வழங்க முடியும்.
இதேவேளை பொருள் உதவியை வழங்க விரும்புபவர்கள்  0112530438  0112530438 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு ஊருகொடவத்தையில் உள்ள உணவு களஞ்சியசாலையில் அவற்றை ஒப்படைக்கலாம்.  0713041226  0713041226 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தொடர்புகொண்டு பொருள் உதவியை வழங்க முடியும் என்றார்.
502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு…???
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை 9 இலட்சத்து 66 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இலட்சத்து 57 ஆயிரத்து 993 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. 502 முகாம்களில் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 221 பேர் தங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி 18 பேர் மரணமடைந்துள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. உணவுப் பொருட்கள் ஹெலிகப்டர்கள் மற்றும் படகுகள் ஊடாக வழங்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக்காலை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விபரங்களை குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது கடந்த சில தினங்களõக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை பொலன்னறுவை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலுமாக இதுவரை 9 இலட்சத்து 66 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 57 ஆயிரத்து 993 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. 502 முகாம்களில் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 221 பேர் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பில் 533000 பேர் பாதிப்பு
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில் ஐந்து இலட்சத்து 33 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 225 முகாம்களில் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 140 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளது. புதன்கிழமை 113 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்துள்ளது.
அம்பாறையில்
அம்பாறை மாவட்டத்தில் 88 ஆயிரத்து 376 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 7817 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 744 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 8065 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் 2705 குடும்பங்களை சேர்ந்த 10882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்திலும் வீடுகளுக்கு சேதம் ஏற்படவில்லை. திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நிலைமை ஆரோக்கியமானதாக மாறிவிருகின்றது. மொத்தமாக இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர்.
200 குளங்கள் அழிவடைந்தன
2 இலட்சம் ஏக்கர் வயல் நாசம் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் தொடர்ந்து மழை பெய்கின்றது. இதேவேளை இந்த மாவட்டங்களில் இதுவரை 200 சிறியளவிலான குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளன. மட்டக்களப்பு அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் இராணுவத்தினர் கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் பாரிய சேவைகளை வழங்கிவருகின்றனர்.
அந்த மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளை வழங்குவதில் அவர்கள் பணியாற்றிவருகின்றனர். இரண்டு ஹெலிகப்டர்களில் உணவுகளை அனுப்பி வருகின்றோம். படகுகளிலும் உணவு அனுப்பப்படுகின்றது.
மட்டக்களப்பில் அதிகம் பாதிப்பு
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே நிலைமை மேசமாகவுள்ளது. அங்கு உணவு கொண்டுசெல்வதற்கும் சிக்கல்கள் காணப்படுகின்றன. பல சவால்களுக்கு மத்தியில் செயற்பட்டுவருகின்றோம்.
எனினும் அந்த மாவட்டத்துக்கும் படகுகளில் உணவுகளை அனுப்பிவருகின்றோம். அனர்த்த முகாமைத்துவ நிலையமானது அனைத்து விதமான ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது.
அரச நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையில் இணைப்புக்களை ஏற்படுத்திவருகின்றோம். மாவட்ட மட்டத்திலும் பல குழுக்களை அமைத்து செயற்பட்டுவருகின்றோம்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் காமின ராஜகருண கருத்து வெளியிடுகையில் கூறியதாவது அரச அதிபர்கள் ஊடாக
48 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 25 மில்லியன் ரூபாவும் அம்பாறைக்கு 8 மில்லியன் ரூபாவும் திருகோணமலைக்கு ஐந்து மில்லியன் ரூபாவும் அனுராதபுரத்துக்கு 2.5 மில்லியன் ரூபாவும் பொலன்னறுவைக்கு 3.5 மில்லியன் ரூபாவும் கண்டிக்கு 1.3 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுவிட்டன.
மொத்தமாக 48 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு தடவைக் கூட பசியுடன் இருக்காத வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். உலர் உணவு மற்றும் சமைத்த உணவு தண்ணீர் போத்தல்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் என பலவற்றை வழங்கிவருகின்றோம்.


- வீரகேசரி-

logo design

Wednesday, January 12, 2011

வைகோ(வால்) சாணி தமிழனா ?

தமிழ் இனத் துரோகி வைகோவை அடையாளம் காண்க…!!!
 
 நேற்றைய தினம் (11-01-2011) வைகோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் ஈழ மக்களின் துயரமும், தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கை வன்னியன்களும், கருணாக்களும் தொடர்ந்தும் துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும்,
சோனியா பணமும் கொடுத்து மூன்று தளபதிகளையும் அனுப்பினார் என்றும்,
லண்டன் சேனல் 4ஐ பார்த்து நெஞ்சில் நெருப்பு விழுந்து வெடித்ததாகவும்,
இவற்றையெல்லாம் மூடி மறைக்க இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் திட்டம் வகுத்துள்ளது என்றும்,
விடுதலைப் புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்த ஈ.என்.டி.எல்.எப். தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்டு, சிறிபெரும்புதூரிலிருந்து டெல்லிக்கு நடைபயணம் போவதாகவும் பொய்களை பரப்புரை செய்யவும்,
ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரை கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும், தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகம் எங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும் இந்தத் துரோகிகளைக் கண்டு விழிப்புணர்வு கொண்டு ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று வைகோ தனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அறிக்கை விட்டுள்ளார்.
வாய்வெடி வைகோவுக்கு ஈ.என்.டி.எல்.எப். சார்பாகப் பதில் கூற எங்களைத் தூண்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் எண்ணற்ற துரோகங்களைச் செய்ததாக கூறியுள்ளீர்கள், ஒரு துரோகத்தை என்றாலும் சொல்லியிருந்தால் நாங்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்க முடியும். வாயில் வருவதை எல்லாம் சவாலாக விட்டு எங்கள் ஈழத் தமிழ் இனத்தை நீங்கள் அழிவுக்கு தள்ளிச் சென்றீர்களா இல்லையா?
எங்களைத் துரோகிகள் என்று கூறுகிறீர்கள், நீங்கள் உங்கள் இனத்துக்கே துரோகம் செய்கிறீர்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும், நீங்கள் தெலுங்கு பேசும் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர், வீட்டுக்குள் தெலுங்கில்தான் பேசுகிறீர்கள், வெளியில் மேடைகளில் உங்களை மதுரைத் தமிழன் என்று பொய் சொல்கிறீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று ஈழத் தமிழர்களிடம் அடுக்கு மொழியில் பேசி பணம் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள், அவர்களும் உங்களைத் தமிழன் என்று எண்ணி விருந்து கொடுத்து வாழ்த்தி அனுப்புகின்றனர். நீங்கள் அவர்களிடத்து உங்களது தாய்மொழி தெலுங்கு என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறீர்களா?

ஆந்திராவில் வாழும் தெலுங்கு மக்கள் மிகவும் பண்புள்ளவர்கள், தெய்வபக்தி மிக்கவர்கள். கிருஸ்ணதேவராயர் காலத்தில் மதுரையைப் பிடித்த தெலுங்கு மகனாகிய நீங்கள் உங்கள் தாய் மொழியை மறைத்துப் பணமும், புகழும் சேர்க்க முற்பட்டு உங்கள் தாயை இழிவு படுத்துகிறீர்கள் என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?

சோனியா படையை அனுப்பினார், படைக்கலம் கொடுத்தார் என்று கூறிய வைக்கோல் இப்போது பணம் கொடுத்தார், தளபதிகளை அனுப்பினார் என்று பிதற்றுகிறீர்கள்! மறந்து போய்விட்டது முன்பு பேசியவற்றை?
சேனல் 4ஐ பார்த்து நெஞ்சு வெடித்தது உமக்கு! எங்கள் இனத்தைப் பலி கொடுத்து தேர்தலில் ஜெயிக்க முயற்சித்ததை மறந்து சேனல் பார்த்து நெஞ்சு வெடிக்கும் கதையை மீண்டும் ஆரம்பித்து விட்டீர்கள். எந்த இடத்திலிருந்து மறுபடி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவிப்பிலிருந்த உணர்வாளர்களுக்கு துரோகக்கூட்டம் கிடைத்துவிட்டது என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
நீங்கள் ஓர் இந்திய எதிர்ப்பாளராகி இருபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. புலிகளையும் இந்திய எதிர்ப்பாளராக்கி, வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களையும் இந்திய எதிர்ப்பாளர்களாக்கிவிட்டீர்கள்.
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டது. அந்த வேளை இந்தியாவைத் துண்டாட பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தன.
இந்தியா இரண்டாவது தடவையாக அருகிலிருக்கும் நாட்டுக்குப் படை அனுப்புவதை அமெரிக்கா விரும்பவில்லை.
இராஜீவ்காந்தி அவர்கள் ஏற்படுத்திய  ஒப்பந்தம் வெற்றிபெறுவதை அன்றைய ஏகாதிபத்தியம் விரும்பவில்லை. புலிகள் இயக்கத்தை இந்தியாவுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் திருப்பிவிட நீங்கள் உங்களது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்குக்கூட தெரியாமல் கள்ளத் தோணியில் வன்னிக்குச் சென்றது தமிழகத்து மக்களுக்கு வேண்டுமென்றால் வீரச்செயலாக இருக்கலாம். நீங்கள் அன்று ஏகாதிபத்தியத்தின் தூதுவராகச் சென்ற விடயம் யாருக்கும் தெரியாது என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
தி.மு.க. வுடன் சுமூக உறவை ஏற்படுத்தி புலிகளை வழிக்குக் கொண்டு வந்து தனிநாடொன்றை உருவாக்க ராஜீவ்காந்தி அவர்கள் மேற்கொண்ட முயற்சியை அறிந்துதான் ஏகாதிபத்தியம் உம்மை தி.மு.க. வுக்குத் தெரியாமல் வன்னிக்கு அனுப்பி அந்தத் திட்டத்தை முறியடித்த விடயம் அன்றே தெரியும்.
பிரேமதாசாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற புலிகளுக்குப் பாதை வகுத்தது நீங்கள்தான். பிரேமதாசாவை புலிகளுக்கு ஆயுதம் வழங்க உத்தரவு போட்டது சி.ஐ.ஏ. நீங்கள் அந்தக் காலங்களில் எத்தனை தடவைகள் அமெரிக்காவுக்குச் சென்றுவந்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
உங்களது சந்திப்பிற்குப் பிறகு விடுதலைப்புலிகள் அன்று பயன்படுத்திய ஆயுதங்கள் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆயுதங்கள்தான். அதாவது எம்-16 ரக துப்பாக்கிகள் உள்பட அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அனைத்தும் பிரேமதாசாவால் கொடுக்கப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள்தான்.
இதற்கெல்லாம் முகவராக செயல்பட்டது நீங்கள்தான் என்று தமிழக மக்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். எங்களுக்குத் தெரியும். இன்று அமெரிக்கா மாறியிருக்கலாம், இன்றும் நீங்கள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிதான்.
நீங்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டுதான் கட்சியைப் பிரித்தீர்கள், பின்னர் எத்தனை தடைவ கட்சிகள் மாறினீர்கள்? எங்களைப் பார்த்து ஈழத் தமிழர் என்ற போர்வையில் செல்கின்றனர் என்று ஈழத் தமிழ் மக்களையே ஏமாற்றும் ஓர் பொய்யைச் சொல்லியுள்ளீர்கள், நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டு கட்சி மாறியதை மறந்து போர்வைக் கதை விட்டுள்ளீர்கள்.
நீங்கள் தெலுங்கு நாயுடு! தமிழன் என்ற போர்வை போர்த்தது போன்று எங்களைச் சொல்கிறீhகள். நாங்கள் ஈழத் தமிழர்கள்தான், இந்தியத் தமிழர்கள் அல்ல! போர்வை போர்க்க வேண்டிய தேவை எமக்கில்லை.
துரோகிகள் என்று வேறு பட்டம் சூட்டியுள்ளீர்கள். நாங்கள் காக்கை வன்னிய இனம் இல்லை. ஆனால் நீங்கள் எட்டப்ப நாயக்கர் இனம் என்பது ஈழத் தமிழருக்குத் தெரியாது. நீங்கள் புலிகளிடமும், ஏகாதிபத்தியத்திடமும் பணம் பெற்றுக் கொண்டு பணியாற்றிய வரலாறு மக்களுக்குத் தெரியாது. மேடைகளில் அழுது வடிந்து தமிழ் இன உணர்வாளராகக் காண்பித்தே 20 ஆண்டுகளை ஓட்டியுள்ளீர்கள். ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகிய காலம் தொட்டு நீங்கள் ஈ.என்.டி.எல்.எப். க்கு எதிராக பல தீயச் செயல்களைச் செய்துள்ளீர்கள்.
எங்கள் இனத்தின் மீது பயணம் செய்து அவர்களைக் கொலைக் களத்துக்கு அனுப்பி தேர்தலில் வெற்றி பெற முயற்சித்து அதிலும் தோல்வி கண்டது போதும். ஈழத் தமிழரது பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் கேரளாவுக்கு முட்டை, காய்கறி போவதைத் தடுத்து தமிழ்நாட்டுக்கு உணர்வைக் காண்பித்து தமிழனாக முயற்சி செய்யவும்.
நீங்கள் செய்துவிட்ட இந்தியத் துரோகமும், ஈழத் துரோகமும் பற்றி விலாவாரியாக ஆதாரங்களுடன் வெளியிடுகிறோம் விரைவில் கண்டுகொள்ளவும்.
நன்றி!
இவ்வண்ணம்,
அரசியல்பிரிவு,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
12-01-2011

Tuesday, January 11, 2011

சுவிஸ் பொலிசாரால் புலிகளின் முக்கியஸ்தர்கள் கைது !


 சுவிற்சர்லாந்து நாட்டில் செயற்பட்டுவந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டின் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய Basel City, Bern, Fribourg, Geneva, Graubünden, Lucerne, Solothurn, St Gallen, Vaud and Zurich. போன்ற 10க்கு மேற்பட்ட மாநிலங்களில் 23 இடங்களில் இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பயங்கரவாத இயக்கம் ஒன்றின் உறுப்புரிமையை கொண்டிருந்தமை, அவ்வியக்கத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்தமை, பலாத்காரமாக பணம் சேகரித்தமை, சுவிஸில் வாழ்ந்துவரும் தமிழ்மக்களை அச்சுறுத்தியமை போன்ற பல காரணங்கள் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என சுவிஸ் நாட்டின் தேசிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இவர்கள் சுவிஸில் வாழ்ந்துவரும் இலங்கை மக்களிடம் சேகரித்த பணத்தினை கொண்டு பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், சுவிற்சர்லாந்து நாட்டில் சேகரிக்கப்பட்ட பணம் மூன்றாம் நாடு ஒன்றின் ஊடாக சட்டத்திற்கு புறம்பாக சுவிற்சர்லாந்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சிறிதளவு பணம் வங்கிமூலம் மாற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் போலியான சம்பள கொடுப்பனவுவ் சான்றிதழ்களை தயாரித்து மக்களுக்கு வழங்கி அச்சான்றிதழ்களின் உதவியுடன் வங்கி கடன்களை பெற்றுக்கொண்டு, அப்பணத்தினையும் மக்களிடம் இருந்து அபகரித்து கொண்டுள்ளார்கள் என்ற குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முக்கியஸ்தர்களில் குலம், மாம்பழம், அல்பிரட், அப்துல்லா உட்பட 8பேர் வரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் விசாரணைகளின் பின்னர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதாரம் 


logo design

புலிகளின் ஆயுத கப்பலை காப்பாற்றிய கண்காணிப்புக் குழு -விக்கிலீக்ஸ்

 விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றுக்கு சரியான நேரத்தில் தகவல்களை வழங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு, அதனை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை வடகிழக்கு கடற்பகுதியில் பயணித்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையினர் தாக்க முனைந்த சமயம், விடுதலைப்புலிகளுக்கு சரியான சமயத்தில் தகவல்களை கொடுத்து போர்நிறுத்த கண்காணிப்புக்குழு காப்பாற்றியதாக 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அனுப்பப்பட்ட அமெரிக்க தூதரகத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவரான நார்வேயின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ரெலிப்சென் என்பவரை நீக்கவேண்டும் என கடிதம் அனுப்பியிருந்தார்.

விடுதலைப்புலிகளின் கப்பலை இலங்கை கடற்படையினர் கண்டறிவதை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தடுத்துள்ளது. அதற்கு ரெலிப்சென் தான் முக்கிய காரணம். அவர் தொலைபேசி மூலம் விடுதலைப்புலிகளுக்கு தகவல்களை வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் கப்பல் தப்பிச்சென்றுவிட்டது என சந்திரிகா, நார்வேக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, அமெரிக்கத் தூதர் கண்காணிப்புக்குழுவின் தலைவர் ரெலிப்சென் உடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, விடுதலைப்புலிகளின் கப்பல் ஒன்று வடகிழக்கு கடலில் பயணிக்கின்றதா என தாம் தவறுதலாக விடுதலைப்புலிகளிடம் தொலைபேசி மூலம் கேட்டுவிட்டதாக ரெலிப்சென் தெரிவித்திருந்தார்.

எனினும் ரெலிப்செனின் நடவடிக்கைகளில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், அவரை நீக்கும்படியும் சந்திரிகா வலியுறுத்தியிருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணி குறித்து நோர்வே உற்றுநோக்கியது - விக்கிலீக்ஸ்
2004 ஆம் ஆண்டில் இலங்கையின் சமாதான செயற்பாடுகளிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் நோர்வேயின் பங்கிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நோர்வே அதிகளவில் கவனத்தில் கொண்டதாக கூறப்படும் விக்கிலீக்ஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

மேலும் மக்கள் விடுதலை முன்னணியினரை சமாதான நடவடிக்கையின் பாதையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இழுக்க தயங்கியமையே இவ்வாறான மோசமான சூழ்நிலைக்கு காராணமென நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் உரையில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலை சமாதான நடவடிக்கைகளுக்கு பாரியதொரு இடையூராக உள்ளதாக தெரிவித்துள்ளார் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் மீதான பார்வையை விசாலமாக்கியுள்ளதுடன், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைள் குறித்தும் கவனம் கொண்டு வருவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர், டோக்கியோவில் உள்ள அதிகாரி ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார் எனவும் விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. 




logo design

Monday, January 10, 2011

பிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா! (படம் இணைப்பு)

தனது நிஜப் பிறந்தநாளை மறைத்து... புத்தாண்டு பிறக்கும் ஜனவரி 1-ந் தேதியையே பிறந்த நாளாகக் கொண்டாடும் வழக்கத் தைக் கொண்ட... சபலச்சாமியார் நித்யானந்தா... இந்த ஜனவரி ஒன்றிலும் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில்... ’ஹேப்பி பர்த்டேவை கோலாகலமாகக் கொண்டாடினார்.

பிறந்த நாள் அன்று நடக்கும் விஷேச பாத பூஜை யின்போது.... நித்தி யின் பிரதான சிஷ்யர்கள் மட்டுமே அவரை நெருங்கிச் சென்று பூஜை பண்ண முடியும்.� நித்தி ஆன்மீக பிஸ் னஸுக்கு வந்த இந்த 7 ஆண்டு களில்... முதல்முறையாகவும் பகிரங்கமாகவும்... நித்தியின் பிரதான சீடர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு..... தானே முதல் ஆளாக பாதபூஜை செய்து... தான் முதலாவது இடத்துக்கு வந்துவிட்டதை ஆசிரமத் தரப்புக்கு அப் பட்டமாக உணர்த்தியிருக்கிறார் நடிகை ரஞ்சிதா.

அதோடு நித்யானந்தாவை கடவுளாகவே பாவித்து... பரபர நிலையில் அவருக்கு ரஞ்சிதா தீப ஆராதனை காட்டி வழிபட... அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நித்தியின் பக்தர்கள் தரிசித்து மகிழ்ந் தார்கள்.

"நித்யானந்தாவோடு ஆபாச சி.டி.யில் இருக்கும் பெண் நானல்ல'’என வெளியே சொல்லிக் கொண்டிருக்கும் ரஞ்சிதாவோடு... எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆசிரமத்தில் ஆனந்தமாய் சஞ்சாரம் செய்துகொண்டிருக்கிறார் நித்தி.� இது அவரது நெருங்கிய சிஷ்ய கோடிகளுக்குத்தான் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தி யிருக்கிறது.
நித்தியின் முகத்திரையைக் கிழித்த மாஜிசீடர் லெனின் தர்மானந்தா மீது... பாலியல் புகார் கொடுத்த சூட்டோடு... நித்தியின் ஆசிரமத்திலேயே தஞ்சமடைந்து... பர்சனல் சேவையில் ரஞ்சிதா இறங்கியிருக்கும் இந்த சூழ்நிலையில்...

கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவின் டி.ஜி.பி.யான குரு பிரசாத்திடம்... நித்தி- ரஞ்சிதா விவகாரம் குறித்தும் ரஞ்சிதாவின் இந்த குபீர் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நாம் கேட்டோம்.

""நாங்கள் நித்யானந்தாவை கஸ்டடியில் வைத்து விசாரித்த போதே...� நடிகை ரஞ்சிதாவோடு தனக்கு ஒரு வருடமாக உடல்ரீதி யான தொடர்பு இருப்பதாக ஒத்துக்கொண்ட நித்யானந்தா... மேலும் 15 பெண்களுடன் தனக்கு சரீர பந்தம் இருந்த தையும் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார். அதோடு தனக்கு அமாவாசை, பௌர்ணமி.. போன்ற நாட்களில் ஏற்படும் உடல் எழுச்சியைத் தணிக்க... கண்டிப்பாக பெண்சரீரம் தேவைப்படும் என்றும் கூச்சமில்லாமல் நித்யானந்தா சொல்லி யிருக்கிறார். இந்த ஆதாரமெல்லாம் எங்களிடம் பத்திரமாக இருக்கிறது.

இன்னொன்று... லெனின் தர்மானந்தா ஆசிரமத்தில் இருந்த காலகட்டத்தில்.. தன்னிடம் தப்பாக நடக்க முயன்றதாக ரஞ்சிதா இப்போது திடீரென குற்றம் சாட்டியிருக்கிறார். லெனின் தர்மானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேறி... நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பான சி.டி.யை. வெளியிட்டபிறகு...� 2010 ஜூன் 21-ல் சென்னையில் வைத்து நாங்கள் ரஞ்சிதாவை விசாரித்தோம். அப்போது அவர் லெனின் தர்மானந்தா தன்னை மிரட்டியதாகவோ... தனக்கு டார்ச்சர் கொடுத்த தாகவோ எங்களிடம் சொல்லவே இல்லை. அதே சமயம்... நித்யானந்தா என்னோடு பேசிக்கொண்டு தொடர்பில்தான் இருக்கிறார் என்றும்.... மீடியாக்களிடம் பேசவேண்டாம் என்று அவர் தன்னை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் எங்களிடம் ரஞ்சிதா� தெரிவித்தார். ஆக நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருப்பதையும்... நித்யானந்தா சொல்வதையெல்லாம் அப்படியே கேட்பவராக ரஞ்சிதா இருப்பதையும் நாங்கள் ஆதாரப் பூர்வமாகத் தெரிந்துகொண்டோம்''’என்று முடித்துக் கொண்டார்.

நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்? என நாம் அவரது தரப்பிலேயே துருவியபோது... ரஞ்சிதா தவிர மற்றொரு பிரபல நடிகையும் அந்தப் பட்டியலில் இருப்பது தெரிய வந்தது. அவர் யார்?

நித்தியின் சீடர் ஒருவரே 2008-ல் நடந்த அந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார். அதன்படி...

2008-ல், சென்னை ஆவடியில் இருக்கும்.. அ.தி.மு.க. எம்.பி. ஒருவருக்குச் சொந்தமான கல்லூரியில் ‘நித்யானந்த பூரண முகாம்’ என்ற பெயரில் 4 நாள் தியான வகுப்பு நடந்தது.� நான்கு நாள் வகுப்பும் நிறைவடைந்ததும்... கடைசி நாள் இரவு... தமிழக தியான பீட பொருளாளர் ராமநாதன் வீட்டில் நித்தி தங்கினார்.

இந்த ராமநாதனுக்கு ஒரு மினி சைஸ் வரலாறு உண்டு. அதாவது 2003-ல் இருந்து 2007-வரை தன்னுடைய எலக்ட்ரால் இண்டியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி மூலம்தான் வெளிநாடுகளுக்கு கடவுள் சிலைகளை ஏற்றுமதி செய்துவந்தார் ராமநாதன். அதற்குப் பிறகு ‘நித்யானந்தாவே தன் தம்பியான நித்தேஸ்வ ரானந்தா மேற்பார்வையில் ஏற்றுமதியைத் தொடங்கினார். 

இது ஒருபுறமிருக்கட்டும். ராமநாதன் வீட்டில் இரவு தங்கிய நித்தி... அந்தக் காலை நேரத்தில் அங்கிருந்து ஹூண்டாய் அக்காய் காரில் கிளம்பினார். அந்தக் காரை ஓட்டியவர் ராமநாதன். இந்தக் காருக்குப் பாதுகாப்பாக 2 கார்கள் அதன் பின்னால் சென்றன. அந்தக் கார் சரியாக காலை 8 மணிக்கு பெசன்ட் நகர் பீச்சை அடைந்தது. 

பீச்சில் வாக்கிங் போவதும்... கடலின் அழகை ரசிப்பதும் நித்திக்கு சுகமான விசயங்கள். அங்கு காரில் இருந்து இறங்கிய நித்தி... தன் செல்போனில்� 5 நிமிடம் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டே நடந்தார். பின்பு உற்சாகமாக..’வாங்க போகலாம்’ என எல்லோரையும் பார்த்துச்சொல்லிவிட்டு.. தான் வந்த காரிலேயே ஏறினார். அங்கிருந்து கிளம்பிய கார் மறுபடியும் ராமநாதன் வீட்டுக்குப் போக வில்லை. அதே பெசன்ட் நகர் பகுதியில் இருக்கும்... ஒரு அபார்ட்மெண்ட்டுக்குப் போய் நின்றது.

பொதுவாக நித்யானந்தா யார் வீட்டுக்குப்போனாலும் அங்கு ஒரு பெரிய கூட்டம் திரட்டப்பட்டிருக்கும்.� பூரணகும்ப மரியாதை கொடுத்துதான் வீட்டுக்குள் நித்தியை அழைப்பார்கள். ஆனால் இங்கு இப்படி எதுவும் நடக்கவில்லை.

பின்னால் வந்த இரண்டு காரையும் கேட்டுக்கு வெளியே நிறுத்திக்கொள்ளச் சொல்லிவிட்டு... அவரது கார் மட்டும் கேட்டுக்குள் நுழைந்தது. ராமநாதன் உள்ளே காரை நிறுத்திவிட்டு... உட னடியாக வெளியே வந்து மற்றவர் களுடன் பேசிக்கொண்டிருந்தார். "சாமி எங்கே? அவர் தனியா எந்த வீட்டுக்கும் போகமாட்டாரே? யாரைப் பார்க்கப் போயிருக்கார்?'’ என சக சீடர்கள் குழம்பினர்.

ஒரு முக்கால் மணி நேரம் கழித்து... நித்யானந்தா சிரித்தபடியே பூரிப்பாக வந்தார். அவரை கார்வரை வழியனுப்பக் கூட அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. 

அந்த வீடு யார் வீடு தெரியுமா? 
"புதுநெல்லு புதுநாத்து' கண்ட பிரபல நடிகையின் வீடு. நித்தி அந்த வீட்டுக்கு ஏன் போனார் என்று யோசித்த அவரது பிரதான� சீடர்களுக்கு... அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது; அன்று அமாவாசை!
இதேபோல் இன்னொரு சம்பவம்.

2009 -ஜூனில் தாம்பரம் அருகே இருந்த ஒரு கல்லூரியில் தியான வகுப்பை நடத்தினார்����������� நித்தி. பொதுவாக இந்த வகுப்புகள் நடக்கும் இடத்திலேயே... பயிற்சியாளர்கள் தங்கியிருப்பார்கள். இங்கு நித்தி தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறை... நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட மூன்று பிர பல நடிகைகளுக்கு ஒதுக் கப்பட்டிருந்தது. 

ரஞ்சிதா அல்லாத அந்த இருவரில் ஒருவர் கணவரை விவாகரத்து பண்ணியவர்.� இன் னொருவரோ... பிரிந்த கணவரை சேர்ந்த நேரத்தில்... அவரை காலனிடம் பறிகொடுத்தவர். இந்த இரண்டு நடிகைகளுமே தங்களை� சமூக சேவைகளில் ஈடுபடுத்திக்கொண்டி ருப்பதோடு.. சேனல்களிலும் தலைகாட்டு���� பவர்கள்.

முதல் நாள் தியான வகுப்பு முடிந்து அறையில் தங்கிய இந்த இரண்டு நடிகை�������� களுக்கும் என்ன அதிர்ச்சி அனுபவமோ தெரியவில்லை... மறுநாள் காலை... ரஞ்சிதாவிடம் "எங்களுக்கு இப்படி ஒரு தியான��������� கிளாஸே வேண்டாம். நாங்கள் வருகிறோம்'’������ என குட்பை சொல்லி விட்டுக் கிளம்பிவிட் டார்கள்.

மற்றநாட்களில் எப்படியோ... ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமி நாட்களிலும்... முறுக்கேறி நிற்கும் நித்தியைப் பார்த்து... அவரது ஆசிரமத்தின் பெண் சந்நியாசினிகள்...� மிரட்சியில் கைபிசைவார்கள்... எந்த நேரத்தில் வேட்டை மிருகம் பாயுமோ என்று.


logo design

Sunday, January 9, 2011

அமெரிக்காவில் எம்.பி மீது துப்பாக்கி சூடு. 6 பேர் பலி. 12 பேர் காயம்.

அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் எம்பியான கிஃப்போர்டு கலந்து கொண்ட நிகழ்வொன்றில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன் 6 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். புடுகாயமடைந்த எம்.பி. கேப்ரியல் கிஃப்போர்டு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றது. 

முதலில் கிஃப்போர்டு இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அதனை மறுத்த மருத்துவப் பேச்சாளர், கிஃப்போர்டு உயிருடன் உள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. குண்டுக் காயங்களுடன் மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். 


ஷாப்பிங் சென்டர் ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிஃபோர்டு கலந்துகொண்ட போதே ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்த இடத்திலேயே 6 பேர் கொல்லப்பட்டுள்ளளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய ஜார்ட லீ லௌனர் எனும் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐகது செய்யப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்காக எப்பிஐ இனரிடம் பாரமளிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் 40 - 50 வயதுவரையான நபர் ஒருவரது புகைப்படத்தினை வெளியிட்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கு பொது மக்களின் உ தவியினை நாடியுள்ளனர். 




logo design

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting