Friday, December 17, 2010

எனது வேலையை தொடர்ந்து செய்வேன் - விடுதலையான பின் அசாஞ்சே (Photos-Vedio)

Assange Juliyan-லண்டனில் உள்ள Westminster Magistrates உயர் நீதிமன்றத்திலிருந்து  சட்டதிட்டங்கள் அடங்கிய பேப்பரை கையில் உயர்த்தி பிடித்தபடி புன்சிரிப்புடன் வெளியில் வந்தார் ஜூலியன் அசாஞ்சே.



"லண்டனின் தூய்மையான காற்றை மீண்டும் சுவாசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் இல்லாத போது எனது குழுவினர்க்கும் , எனக்கும் ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

Wednesday, December 15, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் மனோ கணேசனை தூது அனுப்பிய சந்திரிகா!


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கும் இடையிலான தூதுவராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பியும் ஆன மனோ கணேசன் செயல்பட்டு உள்ளார்.

Tuesday, December 14, 2010

சாமியார் நித்தியானந்தா அறையில் ஆணுறை ,பெண் பரபரப்பு வாக்குமூலம் !

சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்கு மூலத்தையும் இணைத்துள்ளனர்.

பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.

விக்கிலீக்ஸ் அதிபருக்கு(assange julian) பிணை!


.                பிரித்தானிய காவல்துறையினரிடம் சரணடைந்த விக்கிலீக்ஸ் இணையத்தின் ஸ்தாபகரான ஜூலியன் அசான்ச் அவர்களுக்கு லண்டன் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக ஜூலியன் அசான்ச் மீது தோண்டியெடுக்கப்பட்ட சுவீடன் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
இது தொடர்பில் விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், ஜூலியன் அசான்ச் பிரித்தானிய பொலிஸாரிடம் சரணடைந்தார்.
பிரித்தானிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஜூலியன் அசான்ச் அவர்களின் வழக்கு இன்று 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட ஜூலியன் அசான்ச் மீது எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது.

உதயமாகிறான் விக்கிலீக்ஸின் தம்பி

சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு போட்டியாக மற்றுமொறு புதிய இணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய இணைய தளத்திற்கு ஓபன்லீக் என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இரகசிய விடயங்கள் பலவற்றை வெளியிட்டு பெரும் பரப்பரப்பை விக்கிலீக்ஸ் இணையத்தளம் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அதன் தலைவர் ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தலைவர் அசாங்கேயின் நெருக்கமானவராக இருந்த டேனியல் டோஸ்சிட் என்பவராலேயே இந்த புதிய இணையம் செயற்படவுள்ளது.

இந்த இணையம் விக்கிலீக்சுக்கு போட்டியாக அதே பாணியில் இரகசியங்களை வெளியிடவுள்ளது. ஓபன்லீக்ஸ் என்ற இந்த இணையம் 2011 ஆம் ஆண்டு முதல் தமது சேவையை தொடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, December 13, 2010

சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள்: விக்கிலீக்ஸ் அம்பலம்! Vedio

சதாம் உசேன் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே கலில்சத் மற்றும் அரசு தலைமை வக்கீல் முன்கித் பரூன் ஆகியோர் சதாம் தூக்கு குறித்து ஆலோசனை நடத்தினர். தூக்கு மேடை சரியில்லை என்பதால் அமெரிக்க வீரர்கள் புதிதாக மேடை கட்டியதாக கலில்சத்திடம் பரூன் கூறியுள்ளார். சதாம் தூக்கிலிடப்படும் இடத்துக்கு ஈராக் அதிகாரிகள் 14 பேர் ஹெலிகாப்டரில் வருகின்றனர். அவர்களிடம் அமெரிக்க வீரர்கள் சோதனை நடத்தி செல்போன்களை கைப்பற்றுகின்றனர்.

ஸ்வீடனில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கான சதித்திட்டம் பிரிட்டனில் தீட்டப்பட்டது அம்பலம் ( படங்கள் இணைப்பு)

ஸ்வீடனில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பிற்கான அனைத்து திட்டங்களும் பிரிட்டனில் இருந்தே தீட்டப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.


ஈராக்கில் பிறந்த தைமௌர் அப்துல்வாஹாப் அல்-அப்தாலி என்பவர் சுவீடன் தலைநகரில் காரில் வெடிகுண்டை வைத்து தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தினார். படித்த காலம் முதற்கொண்டு பல வருடங்களாக அவர் லூட்டன் நகரிலேயே இருந்து வந்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது
இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் லூட்டன் நகரில் வசித்து வந்தது உறுதியாகியுள்ளதால் ஸ்வீடனில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பிற்கான அனைத்து சதித் திட்டங்களும் பிரிட்டனிலிருந்தே தீட்டப்படிருக்க வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் இவருடன் தொடர்புடைய தீவிரவாதிகள் யார் என்பது உள்ளிட்ட பல விடயங்களையும் போலீசார் தற்போது தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பல பிரிட்டனில் இயங்கி வருவது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது ஸ்வீடன் கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதல் சதித்திட்டம் பிரிட்டனிலிருந்தே தீட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கசிந்து வருவதால் மிகுந்த பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting