Saturday, January 22, 2011

சீறுவாரா சீமான்?மகிந்தவின் வாரிசு நாமலுக்குப் பொன்னாடை போர்த்திய ரவிசங்கர் குருஜி: சிறந்த சேவைகள் செய்கின்றாராம்


இலங்கை வந்துள்ள வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே ரவிசங்கர் குருஜி அவருக்குப் பொன்னாடை போர்த்தியுள்ளார்.

2600 வது வருட புத்த ஜயந்தியை முன்னிட்டு இளைஞர்களுக்கான நாளை அமைப்பும், வாழும் கலை அமைப்பும் இணைந்து அறநெறி நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்துள்ளன. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அதன் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
அதன் போது பெங்களூரிலிருந்து வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜியும் வருகை தந்திருந்தார். விழா மேடையில் வைத்தே அவர் நாமலின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளை அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்தாலோசித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.


logo design

Friday, January 21, 2011

இது எனக்கு சரியான நேரம் அல்ல :விஜய்


இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது.
அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார்.அப்போது கூறியதாவது:

காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.இவ்வாறு விஜய் கூறினார். ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசியது குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது. அரசியலில் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காவலன் பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட நான் விரும்பவில்லை, என்றார். 

logo design

சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!


நயன்தாரா பற்றிய ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவைக் கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.
'வல்லவன்' படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சினை உருவானது. பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரம்லத்திற்குத் தெரியவர பெரும் பிரச்சினை வெடித்தது. இப்போதுதான் அந்தப் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரம்லத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையைக் கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா. இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது.

விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சினை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சினை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு தமக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களைத் தமது நண்பரிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகிப் போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயைத் திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.



logo design

Thursday, January 20, 2011

யமுனைக் கரையில் அம்மணக் கூத்து! இன்னொரு சாமியார் வீடியோ!


அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நித்தியானந்தாவின் வீடியோ சர்ச்சை சற்று தணிந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு சாமியாரின் வீடியோ பரபரப்பை கிளிப்பியுள்ளது.
மதுராவில் வசித்து வந்த ராஜேந்திரா என்பவர் புராணக் கதை சொற்பொழிவாளர். அவரது பக்த கோடிகளால் பகவத் ஆச்சார்யா என்று அழைக்கப்பட்டவர். ஒரு மடமும் நடத்தி வந்திருக்கின்றார்.


அங்கு வரும் தனது வெளிநாட்டு பக்தர்கள் மூலம் ஒரு புது தொழில் தொடங்கியுள்ளார். அது தான் பிட்டுப் படங்களில் அர்த்தமுள்ள இந்துமதம்! பிட்டுப்படங்களுக்கு டைரக்டர் கம் ஹீரோவான நமது சாமியார் காட்சிகளை உண்ர்ந்து நடிக்க வெளியாட்கள் ஒத்து(!) வராது என்று நினைத்தார் போலும்; தன் மனைவியிடமே கால்ஷீட் வாங்கி விட்டார். சர்ரியலிஸத்துக்காக அதில் சில குழந்தைகளையும் பங்கு பெறச் செய்திருக்கிறாராம்! பின் நவீனத்துவத்தை எதற்கு பிசினாரித் தனமாக விட்டு வைக்க வேண்டும் என்று அவரது மடத்தையும் பின்புலமாக சித்தரித்து புதுமையை புகுத்திவிட்டார்.


இப்படியான விசயம் எடுக்கும் போது ஒரு தெய்வீக எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பின்னணியில் அவரது கடவுள்களின் புகைப்படங்களையும் வைத்துள்ளார். மடத்துக்குள்ளே எடுத்தால் Indoor Film என்றும் கம்மி பட்ஜெட் என்றும் விநியோகஸ்தர்கள் கூறிவிடுவார்கள் என்பதால் யமுனை நதிக்கரையில் சில காட்சிகளையும் எடுத்துள்ளார்.


இந்த ஜிலுக்கு ஜிப்பான் வீடியோக்கள் எல்லாம் ஏற்கனவே பல வெப்சைட்கள் மூலமாக விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் பிட்டுப் படங்களால் நிரம்பி பால்வினை வைரஸ் வந்ததோ என்னவோ அவரது லேப்டாப்புக்கு இடுப்பு சுளுக்கி விட்டதாம்! அதனை ஒரு இடத்திற்கு சர்வீசுக்கு செல்ல அங்கிருந்த கரசேவகர்கள் சிலரால் பொது மக்களும் பயன்பெறும் நோக்கில் உள்ளூர் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.


எப்போதும் போல் லேட்டாக விழித்துக் கொண்ட போலீஸ் அவரைத் தேடி செல்ல அவரோ போலிசிடமிருந்து தப்பிக்கும் புனிதப் பயணத்தை மேற்கொண்டார். 15 நாட்கள் கடும் தேடலுக்குப் பிறகு அவரது வீட்டில் வைத்து போலீஸ் செக்ஸ் சாமியாரை கைது செய்துள்ளனர்.


கைது செய்தபோது ஷூடிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட கேமெரா, பல CD கள் கைப்பற்றியுள்ளனர். அவற்றுள் குழைந்தைகள், மனைவி மற்றும் வெளி நாட்டினரோடு 'இருக்கும்' பல மணி நேரம் ஓடக் கூடிய விடியோக்கள் உள்ளனவாம்.


logo design

Wednesday, January 19, 2011

நடிகர்கள் விஜய், அஜீத் அ.தி.மு.க.வில் இணைவார்கள்: திருச்சியில் ஆனந்தராஜ் பேச்சு



அ.தி.மு.க. கூட்டம் திருச்சி ஜங்சன் பகுதி கழக அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆழ்வார்தோப்பில் நடந்தது. பகுதி செயலாளர் நாகநாதர்பாண்டி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, வட்ட செயலாளர் காதர்முகமது வரவேற்றனர். மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன், பரஞ்சோதி எம்.எல்.ஏ., பேசினர்.

கூட்டத்தில் நடிகர் ஆனந்தராஜ், சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் நாட்டில் அ.தி.மு.க. எழுச்சி பெற்று வருகிறது. அ.தி.மு.க.வினர் நடத்தும் கூட்டமே மாநாடுபோல இருக்கிறது. இதைக்கண்டு தி.மு.க. பயப்படுகிறது. கோவை அ.தி.மு.க. கூட்டத்தை பார்த்த தி.மு.க. வாரம் 5 இலவச முட்டை என அறிவித்தது.

இதனால் முட்டை விலை உயர்ந்து இப்போது ரூ.4 ஆக உயர்ந்துவிட்டது. திருச்சி கூட்டத்தை பார்த்து பயந்த தி.மு.க. இலவச கான்கிரீட் வீடு என அறிவித்தது. இதனால் ரூ.140-க்கு விற்ற சிமெண்டு மூட்டை இப்போது விலை ரூ.300 ஆகிவிட்டது.

அ.தி.மு.க. கூட்டத்துக்கே மாநாடு போல திரளும் கூட்டத்தை பார்த்து தி.மு.க. பயந்து உள்ளது. மேலும் நடிகர்கள் இப்போது திரையுலகம் ஆதரவும் பெருகி வருகிறது. நடிகர்கள் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள், அஜித், விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வருகிறார்கள். பா.ம.க. வர உள்ளது. மேலும் நடிகர்கள் வருவார்கள். எம்.ஜி.ஆர். புத்திசாலி. ஒருமுறை மதுரையில் இரவு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காரில் சென்னைக்கு திரும்பினார்.

டிரைவருக்கு அருகில் இருந்த அவரது உதவியாளர் தூங்கி, தூங்கி டிரைவர் மேலே விழுந்து கொண்டே இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். உதவியாளர் கையில் வேர்க்கடலையை கொடுத்து கேட்கும்போது தரவேண்டும் என கூறிவிட்டார்.

விழுப்புரம் வந்தபோது உதவியாளர் கடலை தரவா என்றார் எம்.ஜி.ஆர். வேண்டாம் என்றார். மீண்டும் திண்டிவனம் வந்தபோது உதவியாளர் கடலை வேண்டுமா, என்றார் எம்.ஜி.ஆர். வேண்டாம் என்றார்.

இறுதியில் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தபோதும் உதவியாளர் கேட்டபோது எம்.ஜி.ஆர். வேண்டாம் என கூறிவிட்டார்.

உடனே உதவியாளர் பிறகு ஏன் இரவில் கடலையை வாங்கி என்னிடம் கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். நீ...தூங்கி... தூங்கி டிரைவர் மேலே விழுந்ததால் டிரைவரால் ஓட்ட முடியவில்லை. கடலையை வாங்கி நான் உன்னிடம் கொடுத்ததால் நான் திடீர் என கேட்பேன் என்பதால் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பாய் என்பதால் கடலை பொட்டலத்தை உன்னிடத்தில் கொடுத்து வைத்தேன் என்றார்.

அதனால்தான்... அவருக்கு அ.தி.மு.க.வில் பலர் இருந்தும் புத்திசாலியான ஜெயலலிதாவிடம் அ.தி.மு.க.வை ஒப்படைத்தார். இன்னும் 3 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் தமிழகத்தில் மீண்டும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார்




logo design

Tuesday, January 18, 2011

விலைமாதருடன் பிரதமருக்கு தொடர்பா ? புதிய சர்ச்சை

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி விலை மாதரை தங்க வைப்பதற்காக பல வீடுகளை மிலான் நகரில் வைத்துள்ளதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.அவரது வைபவங்களில் துகிலுரி நடனமாடும் பெண்கள் தங்கவே இவற்றை அவர் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அவர் 17 வயதான மொராக்கோ நாட்டைச் சேர்ந்த கரீமா என்ற பெண்ணுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலிய நாட்டு சட்டதிட்டங்களின் பிரகாரம் 18 வயதிற்கு குறைவான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.கரீமா மஹ்ரோப் எனப்படும் நடன மாது கடந்த வருடம் மே மாதம் திருட்டுக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டபோது அவரை சில்வியோ பெர்லுஸ்கொனி தலையிட்டு விடுதலை செய்ய முயற்சி செய்தார் எனவும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும் இப்பாலியல் குற்றச்சாட்டுக்களை இருவரும் மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது




logo design

சுவிஸ் வங்கி கணக்குகள்: விரைவில் அம்பலப்படுத்துகிறது விக்கிலீக்ஸ்

லண்டன், ஜன.17- சுவிஸ் வங்கியில் ரகசியமாக முதலீடு செய்திருப்பவர்களின் விவரங்களை விரைவில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவுள்ளது. 
ஜூலியஸ் பேயர் என்னும் பிரபலமான சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபல நபர்கள் வைத்திருக்கும் ரகசிய முதலீட்டு விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை (சி.டி.) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜேயிடம் வழங்கியுள்ளார். 
லண்டனில் உள்ள “ஃபிரன்ட்லைன் கிளப்”பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜுலியன் அசான்ஜேயிடம் சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் அந்த குறுந்தகட்டை ஒப்படைத்தார். 
இதையடுத்து, ருடால்ஃப் எல்மருக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ஜே தனது பாராட்டை தெரிவித்தார். “இதன் மூலம் நிதி உலகின் நிழல் நடவடிக்கைகளை ஒழித்துக்கட்ட முடியும்” என்று அசான்ஜே குறிப்பிட்டார். 
சி.டி.,யில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். 
அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை வெளியிட்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளம், தற்போது சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


logo design

Monday, January 17, 2011

கனடாவை நோக்கி இன்னும் இரண்டு கப்பல்கள்: விடுதலைப் புலி உறுப்பினர்களும் தப்பிச் செல்லவுள்ளதாக தகவல்!

கனடாவை நோக்கி இன்னும் இரண்டு கப்பல்களில் மிக விரைவில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைப் புலனாய்வுத் துறையினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இறுதிக்கட்ட போரின் போது பல்வேறு நாடுகளுக்கும் தப்பிச் சென்றிருந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஆகியோர் குறித்த கப்பல்களில் தப்பிச் செல்லவுள்ளதாக கனடா மற்றும் இலங்கைப் புலனாய்வுத்துறையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் கப்பல் பயணத்துக்கான ஆட்கள் திரட்டப்பட்டு வருவதுடன், அவர்கள் சிங்கப்பூரை அண்டிய தென்கிழக்காசிய நாடொன்றின் பிரதேசமொன்றில் ஒன்று சோ்க்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைவதே அவர்களது இலக்கு என்று அறியப்படுகின்றது.
ஆயினும் அவர்களை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமான கப்பல்கள் இதுவரை ஏற்பாட்டாளர்களுக்குக் கிட்டாத நிலையில் அவர்கள், தற்போது அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

ஆயினும் குறித்த பயணம் தொடர்பான விபரங்கள் புலனாய்வுத்துறை வசம் கிட்டியிருந்தாலும், பயணிகளின் உயிர் ஆபத்து கருதி கப்பல்களின் பயணங்கள் பெரும்பாலும் தடுக்கப்படப் போவதில்லை என்றும் உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

அவ்வாறான நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதம் கப்பல்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




logo design

Sunday, January 16, 2011

கொழும்பு பாதுகாப்பு கமேராவில் பதிவான விபத்துக்கள் வீடியோ--Colombo CCTV in action

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாயவின் முயற்சியால் நவீனத்துவத்தை நோக்கி நகரும் இலங்கை (வீடியோ இணைப்பு)


logo design

தடைகளை கடந்து இன்று வெளியானது விஜயின் காவலன்

டைரக்டர் சித்திக் இயக்கத்தில் விஜய்-அசின் நடித்துள்ள படம் காவலன். இப்படத்தை ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிடுகிறார்.டிசம்பர் மாதமே காவலன் பட வெளியாக இருந்தது. 

ஆனால் காவலன் படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. எனவே பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.

தொடர்ந்து பிரச்சனைகள் அதிகரித்து வருவதை பார்த்து கொந்தளிப்பு அடைந்த விஜய் நேரடியாக களத்தில் இறங்கி 'இதுவெறும் படம் மட்டுமல்ல என்னுடைய பிரஸ்டீஜ்' என்று வெளிப்படையாக கூறினார். 

இந்த நிலையில் எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்று நினைத்த விஜய் பிரட்சனைகள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்தார். இந்த நிலையில் காவலன் படம் தடைகளை உடைத்து இன்று உலகமெங்கும் வெளியானது.

logo design

பொதுகழிவறைகள்போல் கிருமி பரப்பும் ATM மெசின்கள். லண்டன் ஆய்வு

அடுத்த முறை ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது கிளவுஸ் அணிந்து கொள்ளுங்க அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கை கழுவுங்க என்கிறது இங்கிலாந்து ஆய்வு முடிவு. ஆம். பொது கழிப்பறை மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ஏடிஎம்களில் இருந்தும் கிருமி தொற்ற வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.

லண்டனை சேர்ந்த ஆன்ட்டி&பாக்டீரியா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் கிருமி தொற்றும் வழிகளுக்கான டாப் 5 இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பரபரப்பான பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களின் தொடுதிரை, கீ போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக் கழிப்பறை சீட்களில் இருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது.
வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் ஒரே அளவு இருந்தது அதில் தெரிய வந்தது.

இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில், ‘‘பொதுக் கழிப்பறையில் தொற்றக் கூடிய பாக்டீரியாக்கள், ஏடிஎம் இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிப்பறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’ என்றார்.
இந்த பட்டியலில் 2வது இடத்தை பொதுத் தொலைபேசி பிடித்தது. போனில் இருந்து கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறினர்.

இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீபேடையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்று பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. பட்டியலில் பஸ் நிறுத்தங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரிய வந்தது.







logo design

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting