Saturday, February 12, 2011

டுவிட்டரை வாங்கப்போவது யார்?


சமூக வலைப்பின்னல் தளமான டுவிட்டரை வாங்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நிறுவங்களின் அதிகாரிகளின் இடையே கீழ்மட்ட அளவில் இது தொடர்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய டுவிட்டரின் பெறுமதி 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் கடந்த வருட வருவாய் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

டுவிட்டருக்கு உலகம் பூராகவும் 190 மில்லியன் பாவனையாளர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் தினசரி 65 மில்லியன் டுவிட்டர்கள் பரிமாறப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

logo design

Thursday, February 10, 2011

19 பெண்களை திருமணம் செய்த ரோமியோவை தேடி பொலிஸ் வலைவீச்சு!


பெண்களை திருமணம் செய்த 33 வயது வாலிபன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வாலிபனின் பெயர் சரத் குமார. குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


இவரிர் 19 ஆவது மனைவியின் உடலை சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பி ஒன்றால் எரித்து இருக்கின்றார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 27.

கணவன் கேட்டு இருந்த பணத்தை இவர் கொடுக்கவே இல்லை. இதனால்தான் எரிக்கப்பட்டார். கணவன் கொடுத்த அடியில் இவரின் கை ஒன்று முறிந்து விட்டது.

இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

கணவன் முன்னர் 18 பெண்களை திருமணம் செய்து இருந்தார் என்று பொலிஸாருக்குத் தெரிவித்து இருக்கின்றார்.




logo design

Wednesday, February 9, 2011

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு மரணதண்டனை வழங்கும் அபாயம்


"விக்கிலீக்ஸ்' ஸ்தாபகர் ஜூலியன் அஸேஞ்சே சுவீடனுக்கு அனுப்பப்பட்டால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளுக்காக சுவீடனுக்கு ஜூலியன் அஸேஞ்சை அனுப்புவது தொடர்பில் பிரித்தானியாவில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே அவரது சட்டத்தரணிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஜூலியன் அஸேஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் அந்நாட்டு இராஜதந்திர இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவரது சட்டத்தரணியான ஜியோப்ரி ரொபேர்ட்ஸன் கூறினார்.

மேலும் சுவீடனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அஸேஞ்சே (39 வயது) மறுப்பு தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள பெல்மார்ஷ் நீதவான் நீதிமன்றில் ஜூலியன் அஸேஞ்சே தொடர்பான இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜூலியன் அஸேஞ்சே சுவீடனிலிருந்து நாடு கடத்தப்படமாட்டார் என்பதை சுவீடன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டுமேன அஸேஞ்சேவின் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்



logo design

Tuesday, February 8, 2011

சிறையில் ஒரு சிங்கம் (வீடியோ இணைப்பு)



முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டு எதிர்வரும் 08 ஆம் திகதியுடன் ஒரு வருடம் ஆகின்றது.

கடந்த 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் கைதிகள் 1500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொன்சேகா சிறையில் என்ன மன நிலையில் இருக்கின்றார்? என்பதை அறிகின்றமையில் ஊடகவியலாளர்கள் தனி ஆர்வம் காட்டினர்.

சில ஊடகவியலாளர்கள் இப்பகீரத முயற்சியில் வெற்றி கண்டனர்.



logo design

தொடர் செக்ஸ்(SEX) தாக்குதல் நடத்தும் மர்ம நபர் ஒரு தமிழரா? (வீடியோ இணைப்பு)


லண்டன் ரூட்டிங் பகுதியில் வீதியில் செல்லும் பல பெண்கள் மேல் பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் நடைபெற்ற பல பாலியல் தாக்குதலுக்கு ஒரு நபரே பொறுப்பு என்றும், அது நடைபெறுகின்ற விதம், மற்றும் இடம் என்பனவற்றை ஆராய்ந்த பொலிசார் தொடர் பாலியல் குற்றங்கள் புரிபவரை வீதியோர வீடியோக் கமராவில் பதிவுசெய்துள்ளனர். அவர் நடமாட்டத்தையும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் அவர் ஒரு தமிழர் என்று இனம் காணப்பட்டுள்ளார். லண்டன் டூடிங் மற்றும் மிச்சம் பகுதிகளில் இந்த மர்மத் தமிழரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


வீதியில் செல்லும் பெண்ணை ஏதாவது ஒரு விதத்தில் கதையக் கொடுத்து, பின்னர் அவரை மறைவான இடத்துக்கு இவர் இழுத்துச் செல்வதாகவும் பின்னர் அவர்கள் மேல் வல்லுறவு கொள்ள முயற்சிப்பதாகவும் இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக சுமார் 5 பெண்கள் மேல் இவர் பாலியல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூலம் இத் தாக்குதலை நடத்தும் தமிழரின் மரபணுக்களை(DNA) பொலிசார் தற்போது எடுத்துள்ளனர். இருப்பினும் குற்றவாழியை கண்டறிய முடியவில்லை.

இதனால் அவர்கள் தமிழ் சமூகத்தினரின் உதவியையும் நாடியுள்ளதோடும், அவரைக் கண்டுபிடித்து தந்தால் 10,000 பவுண்டுகளைச் சன்மானமாக வழங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். மிகவும் ஆபத்தான இவரை எவராவது இனம் கண்டால் உடனடியாக கிரைம் ஸ்டாப்பேஸ் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொள்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இது குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. இருப்பினும் பொலிசார் தற்போது மீண்டும் மக்களின் உதவியை நாடியுள்ளனர்




logo design

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting