Friday, January 21, 2011

சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!


நயன்தாரா பற்றிய ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவைக் கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.
'வல்லவன்' படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சினை உருவானது. பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரம்லத்திற்குத் தெரியவர பெரும் பிரச்சினை வெடித்தது. இப்போதுதான் அந்தப் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரம்லத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையைக் கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா. இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது.

விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சினை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சினை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு தமக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களைத் தமது நண்பரிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகிப் போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயைத் திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.



logo design

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting