Wednesday, April 30, 2008

மேதினம் ஒற்றுமையின் தளம்

“மாபெரும் மேதின ஊர்வலம் 2008″ - P.L.O.T.E சுவிஸ்கிளை
April 30, 2008
window.document.getElementById('post-18022').parentNode.className += ' adhesive_post';
தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! கழகத் தோழர்களே! ஆதரவாளர்களே! எமது உரிமைப் போராட்டத்தை உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையில் உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம். அந்தவகையில் கடைமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் தம்மாலியன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என த.ம.வி.கழகம் தோழமையுடன் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் உண்மையான விடுதலைக்கு தோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் கழகம் இவ்மேதின ஊர்வலத்திற்கு தோழமையுடன் அழைக்கிறது.
எமது தாயகத்தில் தமது அரசியல், இராணுவ சக்தியை முடிந்தவரை பயன்படுத்தி எமதினத்தை அழித்து, அடக்கியாள முற்படும் அதிகார வர்க்கத்தினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது எதிர்ப்பினைத் தெரிவிப்போமாக.
இம்முறை மேதின ஊர்வலமானது சூரிச் (Zurich) பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள SihlPostல் (Lagerstrasse) 01.05.08 காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி BürkliPlatzல் (Bellevue) முடிவடையும்!!!
“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”!
“அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே”!!
“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”!!!
“தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணி” சார்பாக….. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ((P.L.O.T.E. சுவிஸ்கிளை)
தொடர்புகட்கு:- 076/368 15 46, 079/624 90 04, 078/675 41 74, 076/452 25 83

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

 
Cheap Web Hosting