Sunday, October 21, 2007

நம்மநிலைமையும் இப்படிதான்......

சர்தார்ஜி கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன் நிற்கிறார். மனைவி : என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?சர்தார் : நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என் மூஞ்சி எப்படி இருக்கும்னு பார்க்கிறேன்.
***
சர்தார் ஒரு ஓவியக்கண்காட்சியில் நுழைகிறார்.சர்தார் : இதென்ன.. பார்க்கவே கோரமா இருக்கே. இதைத்தான் மாடர்ன் ஆர்ட் அப்படினு சொல்றீங்களா?கண்காட்சி நடத்துபவர் : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கண்ணாடியை, ஓவியத்தை அல்ல.
***
சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக் கோரி மனு செய்கின்றனர்.ஜட்ஜ் : உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களே..அவர்களை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?சர்தார் : அவ்வளவுதானே..இப்போது போய்விட்டு மீண்டும் அடுத்த வருடம் மனுச் செய்கிறோம். உங்களுக்கும் கஷ்டம் இல்லாமப் போவும்.
***
பாண்டாசிங் : நான் லீவுக்கு ஊருக்குப் போறேன். நல்ல க்ரைம் நாவல் இருந்தாக் கொடுங்க, படிக்கிறதுக்கு..சாண்டாசிங் : இந்த நாவல் படிங்க.. நிறைய கொலைகள் நடக்கும். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்.பாண்டாசிங் : அப்படியா!சாண்டாசிங் : ஆமா... கடைசிப்பக்கம் படிக்கும்போதுதான் தெரியும், தோட்டக்காரன் தான் கொலைகாரன்னு.
***
சர்தார் : சார்..நான் ஒரு புக் போனவாரம் எடுத்துட்டுப் போனேன். ஆனால் என்னால அது என்ன கதைன்னு புரிஞ்சிக்கவே முடியல.. ஒரே நம்பரா இருக்கு. நூலகர் : அடப்பாவி..அது டெலிபோன் டைரக்டரி சார். அதத்தான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன்.
***
நண்பருக்கு போன் செய்தார் சாண்டாசிங்.சாண்டாசிங் : இது 044-9234656 தானா?எதிர்முனை : இல்லை. இது 044-9234657(சில வினாடிகள் யோசித்த பின்) சாண்டாசிங் : அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..பக்கத்து ரூம்ல இருக்கற என் நண்பரைக் கூப்பிடுங்க.

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

 
Cheap Web Hosting