பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பலமுறை தப்ப வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதனால் தான் இந்தமுறை பாகிஸ்தானிடம் சொல்லாமலேயே பின்லேடனை அமெரிக்கப் படைகள் தாங்களே வந்து அழித்தாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரங்களுக்கு இடையிலான ரகசிய கேபிள் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், குவாண்டநாமோ பே சிறையில் உள்ள சிலர் மூலமாகவே பின்லேடனின் புதிய இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறையில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சபீ்ர் லால் மெல்மா என்பவர், 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐஎஸ்ஐ உதவியோடு பின்லேடனை காபூலில் இருந்து காப்பாற்றி பாகிஸ்தானுக்குள் அழைத்துச் சென்றது குறித்த விவரங்களை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எல்லை வரை அவர்களை தானும் தனது கூட்டாளிகளும் அழைத்துச் சென்றதாகவும், எல்லைப் பகுதியில் அவர்களை ஐஎஸ்ஐ உளவாளிகள் வரவேற்று அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஒசாமாவின் இருப்பிடம் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்து அதை பாகிஸ்தான் அரசுடன் பகிர்ந்து கொண்டபோதெல்லாம், ஒசாமைவை ஐஎஸ்ஐ இடம் மாற்றி, காப்பாற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான் விமான நிலையங்கள் வழியாகக் கூட அல் கொய்தா தலைவர்களை ஐஎஸ்ஐ பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
பாகிஸ்தான் நம்பிக்கையான நாடு அல்ல-சிஐஏ:
இந் நிலையில் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் தலைவர் லியோன் பனெட்டா கூறுகையில், பாகிஸ்தான் எங்களது எல்லாவிதமான தகவல்களையும் கசிய விட்டது. இதனால் நாங்கள் பின்லேடன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான தகவல் எதையும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கவில்லை.
நாங்கள் எந்த முடிவு எடுத்து பணியை செய்ய ஆரம்பித்தாலும் பாகிஸ்தான் அதற்கு இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் பின்லேடன் மீதான தாக்குதலை மிகவும் உஷாராக மேற்கொண்டோம்.
பாகிஸ்தான் தகவல்களை கசிய விடும் என்ற பயத்தின் காரணமாகவே தாக்குதல் தொடர்பாக நாங்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடு அல்ல.
என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும்:
என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும். அது ஒரு குழப்பமான காரணங்கள் கொண்ட நட்பு. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடனான உறவு தொடரும்.
எங்களது எதிரிகள் இன்னும் அந்த நாட்டில் தான் உள்ளனர். அவர்களுக்கு எதிராக எங்களது தாக்குதல் தொடரும் என்றார்.
நேற்று பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து அவர் தலையில் சுடப்பட்டு இறந்தது போன்ற ஓர் புகைப்படம் உலகையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.பின் லேடன் இறந்த புகைப்படத்தை,அமெரிக்கா அதிகார பூர்வமாக இன்னும் வெளியிடாத நிலையில், ஏனைய இணையதளங்களும்,இணைய செய்திகளும், தொலைக்காட்சி,செய்தித்துறை ஊடகங்களும் இணையத்தில் வெளியான ஓர் புகைப்படத்தை வெளியிட்டன.அதனைத் தொடர்ந்து இணையங்களிலும்,சமூக வலைப்பின்னல்களிலும் பரபரப்பு விவாதங்கள் பற்றிக்கொண்டன.நெற்றியில் சுட்டிருக்கிறார்கள் போலும்.?இல்லை கண்பகுதியில்?என்பது போன்று.மறுபுறம் இது உண்மையான புகைப்படமா?போலியா என்று ?
பல மணி நேர ஆராய்ச்சிக்குப் பின்னும்,சில இணைய தளங்கள் அந்த புகைப்படம் போலி என உறுதி செய்யப் பட்ட பின்னுமே ஒருவாறு முடிவுக்கு மக்களால் வர இயன்றது.கடைசியாக பார்த்தால் அது இரண்டு வருடங்களுக்கு முன்பே இணையங்களில் உலவிய புகைப்படமாம்.
இப்படி மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்புவதற்கான காரணம் பொறுப்பற்ற தொலைக்காட்சி ஊடகங்களும்,செய்த்தித்தாள் நிறுவனங்களுமே.உண்மையா என உறுதி செய்யாத ஓர் புகைப்படத்தை எடுத்து அதை மக்கள் மத்தியில் பரப்பி,பரபரப்பை ஏற்ப்படுத்தி வியாபாரம் செய்வது.ஒரு நிகழ்வு நடக்கும் போது ஓர் சாதாரண மனிதன் கூட அது உண்மைதானா?அதற்கு ஆதாரம் இருக்கிறதா என அறிய முயற்சிப்பான்.ஆனால் பொறுப்புள்ள ஊடகங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கின்றன பாருங்கள்!
ஆதாரமான புகைப்படம் இணைப்பு ஒற்றுப் பாருங்கள் இரண்டு கண்களினூடாக குண்டுகள் பாய்ந்து பாதிக்கப்பட்ட முகத்துடன்கூடிய படமும் உயிருடன் இருக்கும் போது எடுத்த படமும் ஓரமாதிரி பல் மீசை மேலும் பல ஒற்றுமையுடன் .இரண்டு படங்களினதும் ஒவ்வொரு பகுதியையும் உற்றுப்பாருங்கள் .
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.
அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.
இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.
லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.
இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.
அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிபிஐ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.
இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.
அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.
அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.
மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.
அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.
அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.
இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிபிஐவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்த கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா அனுமதி தந்தார்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில்ன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.
மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.
இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.
40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.
இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன.
இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
இந்த முழு ஆபரேசனையும் அமெரிக்காவிலிருந்து ஒருங்கிணைத்த சிஐஏ குழுவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் முழு அளவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
பாகிஸ்தானின் அப்போட்டாபாத் நகரில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். அவரது உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்லாமாபாதுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர்,
இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒசாமாவின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் மற்றும் அவருக்கு நெருக்கமான 4 நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக துன்யா தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின் லேடனின் சடலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. எனினும் இவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒசாமா சுட்டுக்கொல்லப்பட முன் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கலாம் என இப்புகைப்படத்தை வெளியிட்ட கருத்து
தளங்களில் (Forums) பலர் கருத்துப்பதிவு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒசாமாவின் உடலம் ஆப்கானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்து உறுதிப்படுத்தும் எனவும் அமெரிக்க தகவல்கள் கூறியிருந்தன.
இது தொடர்பில் News X செய்தி சேவை தெரிவிக்கையில்
உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக அமெரிக்காவால் வர்ணிக்கப்படும், அல் கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை நேற்று (ஞாயிற்றுகிழமை) நள்ளிரவு, அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் சுட்டுக்கொன்றனர்.
பாகிஸ்த்தான் தலைநகர் இஸ்லாமாபத்திலிருந்து வடக்கே 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓர் மாளிகையில் தனது குடும்பத்தினருடன் அவர் தங்கியிருந்த போதே, அமெரிக்க இராணுவத்தினரின் ரகசிய தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இத்தாக்குதலில் பாகிஸ்த்தானின் உளவாளிகளும் பங்கெடுத்ததாக பாகிஸ்த்தான் புலனாய்வு தரப்பு தெரிவித்துள்ளது.
ஒசாமாவின் தலையில் சூடு
நேற்று நள்ளிரவு, அங்கு தான் ஒசாமா இருப்பதாக தகவல் உறுதிப்பட கிடைத்ததும், சட்டென அங்கு விரைந்த அமெரிக்க புலனாய்வு படையினர், ஒசாமா தங்கியிருந்த பகுதியை துல்லியமாக கணித்து துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். ஒசாமா தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள் .
எனினும் அமெரிக்க படையினரின் இடைவிடாத துப்பாக்கிச்சூடு தாக்குதலில், ஒசாமா பின்லாடனின் தலையில் குண்டுபாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார். அவருடன் மேலும் மூன்று ஆண்களும், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்மணியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
40 நிமிடங்கள் வரை மாத்திரமே இந்த மிஷன் நடந்தேறியது. அமெரிக்க தரப்பில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. எனினும் அங்கு ரேய்டு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இயந்திர கோளாறினால் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ஹெலிகாப்டர் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரச அதிகாரிகளுக்கே இந்த மிஷன் பற்றி தெரியாது?
ஒசாமா மீது தாக்குதல் நடத்த போவதை, பாகிஸ்த்தான் உட்பட்ட எந்த நாட்டுக்கும் அமெரிக்கா அறிவித்திருக்கவில்லை என்பதும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஒரு சிறிய குழுவினருக்கு மாத்திரமே, சம்பவ நேரம் இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒசாமா தரப்பினருக்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினர் வரை உளவாளிகள் இருப்பதால், எந்த நேரத்திலும் அவர்கள் விழிப்படைந்து விட கூடும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இரகசியமாக இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒசாமா கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒமா விடுத்த அறிக்கை
ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில்,
‘இன்றிரவு, என்னால் அமெரிக்கர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அறிவித்தலை கூறமுடியும். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை காவுகொண்ட தீவிரவாத குழு தலைவர் ஒசாமா பின்லாடன், அமெரிக்க படைகள் முன்னெடுத்த ஓர் தாக்குதல் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய உடலமும் தற்போது சிறைகாப்புக்கு (Custody) கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லாடனின் இறப்பானது எமது குறிப்பிடத்தக்க ஓர் வெற்றியாகும். நாங்கள் மீண்டும் கூறுகிறோம். இது இஸ்லாம் மதத்திற்கு எதிரான போரல்ல. பின்லாடன் இஸ்லாமியர்களின் மத தலைவரும் அல்ல. அவர் இஸ்லாமியர்களை படுகொலை செய்தவர்’.
என அவர் தெரிவித்தார். இவ் அறிவித்தலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் மாளிகை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள், ஒசாமாவின் படுகொலைக்கு தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
புஷ்ஷின் சபதம் நிறைவேறியது
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், இத்தாக்குதலை பெரும் சிறப்பு வாய்ந்த தாக்குதலாக வர்ணித்துள்ளார். எவ்வளவு காலம் எடுத்தது என்பது முக்கியமல்ல. நீதி தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே இதில் குறிப்பிடவேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
2001 இல் அமெரிக்க செப்டெம்பர் 11 தாக்குதலின் போது, அதிபராக இருந்த புஷ், மிக உணர்ச்சிவசப்பட்டவராக ஒசாமா பின்லாடன் உயிரோடோ, பிணமாகவே எமக்கு வேண்டும் என சபதமெடுத்திருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
கொல்லப்பட்டது ஒசாமாவா?
கொல்லப்பட்டது ஒசாமா தான் என அல் கைதா தரப்பினரால் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பின்லேடனின் உடல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து ஒசாமாவின் உடலை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்படுள்ளதாக அமெரிக்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
பாகிஸ்த்தான் சாயம் வெளுத்தது!?
இதேவேளை இவ்வளவு நாளும் ஒசாமாவை பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தது பாகிஸ்த்தானே என்பது இஸ்லாமாபாத்தில் வைத்து ஒசாமா கொல்லப்பட்டதற்கு இது நல்ல சான்று எனவும், இதன் மூலம் பாகிஸ்த்தானின் சாயம் வெளுத்துவிட்டதாகவும், இந்திய தரப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
1997ம் ஆண்டு அமெரிக்க ஒசாமா பின் லேடனை சி.என்.என் தொலைக்காட்சி செவ்வி கண்ட போது
அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின் லேடனின் சடலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. எனினும் இவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒசாமா சுட்டுக்கொல்லப்பட முன் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கலாம் என இப்புகைப்படத்தை வெளியிட்ட கருத்து
தளங்களில் (Forums) பலர் கருத்துப்பதிவு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒசாமாவின் உடலம் ஆப்கானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்து உறுதிப்படுத்தும் எனவும் அமெரிக்க தகவல்கள் கூறியிருந்தன.
இது தொடர்பில் News X செய்தி சேவை தெரிவிக்கையில்
உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக அமெரிக்காவால் வர்ணிக்கப்படும், அல் கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை நேற்று (ஞாயிற்றுகிழமை) நள்ளிரவு, அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் சுட்டுக்கொன்றனர்.
பாகிஸ்த்தான் தலைநகர் இஸ்லாமாபத்திலிருந்து வடக்கே 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓர் மாளிகையில் தனது குடும்பத்தினருடன் அவர் தங்கியிருந்த போதே, அமெரிக்க இராணுவத்தினரின் ரகசிய தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இத்தாக்குதலில் பாகிஸ்த்தானின் உளவாளிகளும் பங்கெடுத்ததாக பாகிஸ்த்தான் புலனாய்வு தரப்பு தெரிவித்துள்ளது.
ஒசாமாவின் தலையில் சூடு
நேற்று நள்ளிரவு, அங்கு தான் ஒசாமா இருப்பதாக தகவல் உறுதிப்பட கிடைத்ததும், சட்டென அங்கு விரைந்த அமெரிக்க புலனாய்வு படையினர், ஒசாமா தங்கியிருந்த பகுதியை துல்லியமாக கணித்து துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். ஒசாமா தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள் .
எனினும் அமெரிக்க படையினரின் இடைவிடாத துப்பாக்கிச்சூடு தாக்குதலில், ஒசாமா பின்லாடனின் தலையில் குண்டுபாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார். அவருடன் மேலும் மூன்று ஆண்களும், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்மணியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
40 நிமிடங்கள் வரை மாத்திரமே இந்த மிஷன் நடந்தேறியது. அமெரிக்க தரப்பில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. எனினும் அங்கு ரேய்டு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இயந்திர கோளாறினால் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ஹெலிகாப்டர் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரச அதிகாரிகளுக்கே இந்த மிஷன் பற்றி தெரியாது?
ஒசாமா மீது தாக்குதல் நடத்த போவதை, பாகிஸ்த்தான் உட்பட்ட எந்த நாட்டுக்கும் அமெரிக்கா அறிவித்திருக்கவில்லை என்பதும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஒரு சிறிய குழுவினருக்கு மாத்திரமே, சம்பவ நேரம் இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒசாமா தரப்பினருக்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினர் வரை உளவாளிகள் இருப்பதால், எந்த நேரத்திலும் அவர்கள் விழிப்படைந்து விட கூடும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இரகசியமாக இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒசாமா கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒமா விடுத்த அறிக்கை
ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில்,
‘இன்றிரவு, என்னால் அமெரிக்கர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அறிவித்தலை கூறமுடியும். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை காவுகொண்ட தீவிரவாத குழு தலைவர் ஒசாமா பின்லாடன், அமெரிக்க படைகள் முன்னெடுத்த ஓர் தாக்குதல் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய உடலமும் தற்போது சிறைகாப்புக்கு (Custody) கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லாடனின் இறப்பானது எமது குறிப்பிடத்தக்க ஓர் வெற்றியாகும். நாங்கள் மீண்டும் கூறுகிறோம். இது இஸ்லாம் மதத்திற்கு எதிரான போரல்ல. பின்லாடன் இஸ்லாமியர்களின் மத தலைவரும் அல்ல. அவர் இஸ்லாமியர்களை படுகொலை செய்தவர்’.
என அவர் தெரிவித்தார். இவ் அறிவித்தலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் மாளிகை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள், ஒசாமாவின் படுகொலைக்கு தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
புஷ்ஷின் சபதம் நிறைவேறியது
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், இத்தாக்குதலை பெரும் சிறப்பு வாய்ந்த தாக்குதலாக வர்ணித்துள்ளார். எவ்வளவு காலம் எடுத்தது என்பது முக்கியமல்ல. நீதி தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே இதில் குறிப்பிடவேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
2001 இல் அமெரிக்க செப்டெம்பர் 11 தாக்குதலின் போது, அதிபராக இருந்த புஷ், மிக உணர்ச்சிவசப்பட்டவராக ஒசாமா பின்லாடன் உயிரோடோ, பிணமாகவே எமக்கு வேண்டும் என சபதமெடுத்திருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
கொல்லப்பட்டது ஒசாமாவா?
கொல்லப்பட்டது ஒசாமா தான் என அல் கைதா தரப்பினரால் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பின்லேடனின் உடல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து ஒசாமாவின் உடலை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்படுள்ளதாக அமெரிக்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
பாகிஸ்த்தான் சாயம் வெளுத்தது!?
இதேவேளை இவ்வளவு நாளும் ஒசாமாவை பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தது பாகிஸ்த்தானே என்பது இஸ்லாமாபாத்தில் வைத்து ஒசாமா கொல்லப்பட்டதற்கு இது நல்ல சான்று எனவும், இதன் மூலம் பாகிஸ்த்தானின் சாயம் வெளுத்துவிட்டதாகவும், இந்திய தரப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
1997ம் ஆண்டு அமெரிக்க ஒசாமா பின் லேடனை சி.என்.என் தொலைக்காட்சி செவ்வி கண்ட போது
ஜப்பான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கியதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
சென்டாய் நகரம் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளது.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பேரழிவு கடந்த 150 ஆண்டுகளில் உலகில் எங்கும் ஏற்படாத பேரழிவாகக் கருதப்படுகிறது.
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் நாடு தான் மிகப் பெரும் அழிவை சந்தித்தது. ஹிரோஷிமா, நாகாசாகி என்ற 2 நகரங்கள் நொறுங்கின.
தற்போது ஜப்பான் மக்கள், சுனாமி மற்றும் அணு உலைகள் வெடிப்பால் உலகப் போர் பேரழிவை விட அதிகமான அழிவை சந்தித்துள்ளனர்.
பொருட்சேதம் அளவிட முடியாத அளவுக்கு உள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் மக்களை நில அதிர்வுகளும், பூகம்பங்களும் தொடர்ந்து பீதியில் ஆழ்த்தி உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம் ஏற்பட்ட பிறகு இது வரை சுமார் 175 தடவை நில அதிர்வு ஏற்பட்டு விட்டது. நேற்று முன்தினம் 2 தடவை பூகம்பம் ஏற்பட்டது.
நேற்று காலையிலும் ஜப்பான் கிழக்கு கடலோரத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் ஜப்பானில் முக்கிய பெரிய தீவான ஹோன்சுவை மையமாக கொண்டு ஏற்பட்டது.
இது பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவு உலகில் 7-வது பெரிய தீவாக கருதப்படுகிறது. தீவின் கடலோரத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று பீதி கிளம்பியது.
இதனால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்றனர். சில மணி நேரம் கழித்து சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிந்த பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட் டனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக உலுக்கும் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளில் இந்த தீவு சுமார் 8 அடி நகர்ந்து விட்டது.
ஜப்பான் வட பகுதி கடலோர ஊர்கள் முழுவதும் சேறும் சகதியுமாக கிடக்கின்றன. சாலைகளில் கார்களும், கண்டெய்னர்களும் குப்பைகளாக மாறி கிடக்கின்றன. மக்களிடம் தொடர்ந்து பீதி காணப்படுகிறது
லண்டன் ரூட்டிங் பகுதியில் வீதியில் செல்லும் பல பெண்கள் மேல் பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் நடைபெற்ற பல பாலியல் தாக்குதலுக்கு ஒரு நபரே பொறுப்பு என்றும், அது நடைபெறுகின்ற விதம், மற்றும் இடம் என்பனவற்றை ஆராய்ந்த பொலிசார் தொடர் பாலியல் குற்றங்கள் புரிபவரை வீதியோர வீடியோக் கமராவில் பதிவுசெய்துள்ளனர். அவர் நடமாட்டத்தையும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் அவர் ஒரு தமிழர் என்று இனம் காணப்பட்டுள்ளார். லண்டன் டூடிங் மற்றும் மிச்சம் பகுதிகளில் இந்த மர்மத் தமிழரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் செல்லும் பெண்ணை ஏதாவது ஒரு விதத்தில் கதையக் கொடுத்து, பின்னர் அவரை மறைவான இடத்துக்கு இவர் இழுத்துச் செல்வதாகவும் பின்னர் அவர்கள் மேல் வல்லுறவு கொள்ள முயற்சிப்பதாகவும் இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக சுமார் 5 பெண்கள் மேல் இவர் பாலியல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூலம் இத் தாக்குதலை நடத்தும் தமிழரின் மரபணுக்களை(DNA) பொலிசார் தற்போது எடுத்துள்ளனர். இருப்பினும் குற்றவாழியை கண்டறிய முடியவில்லை.
இதனால் அவர்கள் தமிழ் சமூகத்தினரின் உதவியையும் நாடியுள்ளதோடும், அவரைக் கண்டுபிடித்து தந்தால் 10,000 பவுண்டுகளைச் சன்மானமாக வழங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். மிகவும் ஆபத்தான இவரை எவராவது இனம் கண்டால் உடனடியாக கிரைம் ஸ்டாப்பேஸ் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொள்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இது குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. இருப்பினும் பொலிசார் தற்போது மீண்டும் மக்களின் உதவியை நாடியுள்ளனர்
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் சர்வாதி காரியான இவர் 24 வருடங் களாக ஈராக்கில் ஆட்சி நடத்தினார். அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்இவர் அதிபராக இருந்த போது கடந்த 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெரு மளவில் விற்று சாதனை படைத்தன.
இந்த நிலையில் அவர் எழுதிய “ஷபீபா அண்டு தி கிங்” “புரூனோ” என்ற கதைகள் சினிமா படமாக தயாரிக்கப்படுகிறது. இதை பேரமவுண்ட் ஆங்கில பட நிறுவனம் இவற்றை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென் டைரக்டு செய்கிறார். நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது
வேற்றுக் கிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது" என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வருபவர்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும் தெரிவித்தனர்.
இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.
ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.
இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி விலை மாதரை தங்க வைப்பதற்காக பல வீடுகளை மிலான் நகரில் வைத்துள்ளதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.அவரது வைபவங்களில் துகிலுரி நடனமாடும் பெண்கள் தங்கவே இவற்றை அவர் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே அவர் 17 வயதான மொராக்கோ நாட்டைச் சேர்ந்த கரீமா என்ற பெண்ணுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலிய நாட்டு சட்டதிட்டங்களின் பிரகாரம் 18 வயதிற்கு குறைவான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.கரீமா மஹ்ரோப் எனப்படும் நடன மாது கடந்த வருடம் மே மாதம் திருட்டுக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டபோது அவரை சில்வியோ பெர்லுஸ்கொனி தலையிட்டு விடுதலை செய்ய முயற்சி செய்தார் எனவும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும் இப்பாலியல் குற்றச்சாட்டுக்களை இருவரும் மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது
அடுத்த முறை ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது கிளவுஸ் அணிந்து கொள்ளுங்க அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கை கழுவுங்க என்கிறது இங்கிலாந்து ஆய்வு முடிவு. ஆம். பொது கழிப்பறை மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ஏடிஎம்களில் இருந்தும் கிருமி தொற்ற வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.
லண்டனை சேர்ந்த ஆன்ட்டி&பாக்டீரியா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் கிருமி தொற்றும் வழிகளுக்கான டாப் 5 இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பரபரப்பான பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களின் தொடுதிரை, கீ போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக் கழிப்பறை சீட்களில் இருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது.
வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் ஒரே அளவு இருந்தது அதில் தெரிய வந்தது.
இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில், ‘‘பொதுக் கழிப்பறையில் தொற்றக் கூடிய பாக்டீரியாக்கள், ஏடிஎம் இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிப்பறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’ என்றார்.
இந்த பட்டியலில் 2வது இடத்தை பொதுத் தொலைபேசி பிடித்தது. போனில் இருந்து கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறினர்.
இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீபேடையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்று பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. பட்டியலில் பஸ் நிறுத்தங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரிய வந்தது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தம்பியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளான்.
ஜோர்டன் ரைஸ் என்ற 13 வயதான அச்சிறுவன், தனது தாயார் மற்றும் 10 வயதான சகோதரனுடன் காரில் பயணம் செய்துள்ளான்.
கார் இடை நடுவே வெள்ளத்தில் நிற்கவே உடனே அவசர உதவிச் சேவைக்கு அழைப்பினை மேற்கொண்டு இவர்கள் மூவரும் காரின் மேலே உட்கார்ந்துள்ளனர். உடனே இவர்களை சிலர் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
இதன் போது முதலில் ஜோர்டனை காப்பாற்ற அவர்கள் முயன்ற போது அவன் தனது தம்பியைக் காப்பாற்றும்படிக் கூறியுள்ளார்.
அவர்கள் தம்பியை ஒருவாறு காப்பாற்றியதன் பின்னர் ஜோர்டனையும் அவனது தாயாரையும் காப்பாற்ற முற்பட்ட போது வெள்ளத்தின் வேகம் அதிகரிக்கவே கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி சம்பவமானது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சிறுவனின் தந்தை தனது மகனை நினைத்து பெருமையடைவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
நேற்றைய தினம் (11-01-2011) வைகோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் ஈழ மக்களின் துயரமும், தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கை வன்னியன்களும், கருணாக்களும் தொடர்ந்தும் துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும்,
சோனியா பணமும் கொடுத்து மூன்று தளபதிகளையும் அனுப்பினார் என்றும்,
லண்டன் சேனல் 4ஐ பார்த்து நெஞ்சில் நெருப்பு விழுந்து வெடித்ததாகவும்,
இவற்றையெல்லாம் மூடி மறைக்க இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் திட்டம் வகுத்துள்ளது என்றும்,
விடுதலைப் புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்த ஈ.என்.டி.எல்.எப். தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்டு, சிறிபெரும்புதூரிலிருந்து டெல்லிக்கு நடைபயணம் போவதாகவும் பொய்களை பரப்புரை செய்யவும்,
ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரை கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும், தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகம் எங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும் இந்தத் துரோகிகளைக் கண்டு விழிப்புணர்வு கொண்டு ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று வைகோ தனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அறிக்கை விட்டுள்ளார்.
வாய்வெடி வைகோவுக்கு ஈ.என்.டி.எல்.எப். சார்பாகப் பதில் கூற எங்களைத் தூண்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் எண்ணற்ற துரோகங்களைச் செய்ததாக கூறியுள்ளீர்கள், ஒரு துரோகத்தை என்றாலும் சொல்லியிருந்தால் நாங்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்க முடியும். வாயில் வருவதை எல்லாம் சவாலாக விட்டு எங்கள் ஈழத் தமிழ் இனத்தை நீங்கள் அழிவுக்கு தள்ளிச் சென்றீர்களா இல்லையா?
எங்களைத் துரோகிகள் என்று கூறுகிறீர்கள், நீங்கள் உங்கள் இனத்துக்கே துரோகம் செய்கிறீர்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும், நீங்கள் தெலுங்கு பேசும் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர், வீட்டுக்குள் தெலுங்கில்தான் பேசுகிறீர்கள், வெளியில் மேடைகளில் உங்களை மதுரைத் தமிழன் என்று பொய் சொல்கிறீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று ஈழத் தமிழர்களிடம் அடுக்கு மொழியில் பேசி பணம் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள், அவர்களும் உங்களைத் தமிழன் என்று எண்ணி விருந்து கொடுத்து வாழ்த்தி அனுப்புகின்றனர். நீங்கள் அவர்களிடத்து உங்களது தாய்மொழி தெலுங்கு என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறீர்களா?
ஆந்திராவில் வாழும் தெலுங்கு மக்கள் மிகவும் பண்புள்ளவர்கள், தெய்வபக்தி மிக்கவர்கள். கிருஸ்ணதேவராயர் காலத்தில் மதுரையைப் பிடித்த தெலுங்கு மகனாகிய நீங்கள் உங்கள் தாய் மொழியை மறைத்துப் பணமும், புகழும் சேர்க்க முற்பட்டு உங்கள் தாயை இழிவு படுத்துகிறீர்கள் என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?
சோனியா படையை அனுப்பினார், படைக்கலம் கொடுத்தார் என்று கூறிய வைக்கோல் இப்போது பணம் கொடுத்தார், தளபதிகளை அனுப்பினார் என்று பிதற்றுகிறீர்கள்! மறந்து போய்விட்டது முன்பு பேசியவற்றை?
சேனல் 4ஐ பார்த்து நெஞ்சு வெடித்தது உமக்கு! எங்கள் இனத்தைப் பலி கொடுத்து தேர்தலில் ஜெயிக்க முயற்சித்ததை மறந்து சேனல் பார்த்து நெஞ்சு வெடிக்கும் கதையை மீண்டும் ஆரம்பித்து விட்டீர்கள். எந்த இடத்திலிருந்து மறுபடி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவிப்பிலிருந்த உணர்வாளர்களுக்கு துரோகக்கூட்டம் கிடைத்துவிட்டது என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
நீங்கள் ஓர் இந்திய எதிர்ப்பாளராகி இருபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. புலிகளையும் இந்திய எதிர்ப்பாளராக்கி, வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களையும் இந்திய எதிர்ப்பாளர்களாக்கிவிட்டீர்கள்.
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டது. அந்த வேளை இந்தியாவைத் துண்டாட பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தன.
இந்தியா இரண்டாவது தடவையாக அருகிலிருக்கும் நாட்டுக்குப் படை அனுப்புவதை அமெரிக்கா விரும்பவில்லை.
இராஜீவ்காந்தி அவர்கள் ஏற்படுத்திய ஒப்பந்தம் வெற்றிபெறுவதை அன்றைய ஏகாதிபத்தியம் விரும்பவில்லை. புலிகள் இயக்கத்தை இந்தியாவுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் திருப்பிவிட நீங்கள் உங்களது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்குக்கூட தெரியாமல் கள்ளத் தோணியில் வன்னிக்குச் சென்றது தமிழகத்து மக்களுக்கு வேண்டுமென்றால் வீரச்செயலாக இருக்கலாம். நீங்கள் அன்று ஏகாதிபத்தியத்தின் தூதுவராகச் சென்ற விடயம் யாருக்கும் தெரியாது என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
தி.மு.க. வுடன் சுமூக உறவை ஏற்படுத்தி புலிகளை வழிக்குக் கொண்டு வந்து தனிநாடொன்றை உருவாக்க ராஜீவ்காந்தி அவர்கள் மேற்கொண்ட முயற்சியை அறிந்துதான் ஏகாதிபத்தியம் உம்மை தி.மு.க. வுக்குத் தெரியாமல் வன்னிக்கு அனுப்பி அந்தத் திட்டத்தை முறியடித்த விடயம் அன்றே தெரியும்.
பிரேமதாசாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற புலிகளுக்குப் பாதை வகுத்தது நீங்கள்தான். பிரேமதாசாவை புலிகளுக்கு ஆயுதம் வழங்க உத்தரவு போட்டது சி.ஐ.ஏ. நீங்கள் அந்தக் காலங்களில் எத்தனை தடவைகள் அமெரிக்காவுக்குச் சென்றுவந்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
உங்களது சந்திப்பிற்குப் பிறகு விடுதலைப்புலிகள் அன்று பயன்படுத்திய ஆயுதங்கள் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆயுதங்கள்தான். அதாவது எம்-16 ரக துப்பாக்கிகள் உள்பட அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அனைத்தும் பிரேமதாசாவால் கொடுக்கப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள்தான்.
இதற்கெல்லாம் முகவராக செயல்பட்டது நீங்கள்தான் என்று தமிழக மக்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். எங்களுக்குத் தெரியும். இன்று அமெரிக்கா மாறியிருக்கலாம், இன்றும் நீங்கள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிதான்.
நீங்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டுதான் கட்சியைப் பிரித்தீர்கள், பின்னர் எத்தனை தடைவ கட்சிகள் மாறினீர்கள்? எங்களைப் பார்த்து ஈழத் தமிழர் என்ற போர்வையில் செல்கின்றனர் என்று ஈழத் தமிழ் மக்களையே ஏமாற்றும் ஓர் பொய்யைச் சொல்லியுள்ளீர்கள், நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டு கட்சி மாறியதை மறந்து போர்வைக் கதை விட்டுள்ளீர்கள்.
நீங்கள் தெலுங்கு நாயுடு! தமிழன் என்ற போர்வை போர்த்தது போன்று எங்களைச் சொல்கிறீhகள். நாங்கள் ஈழத் தமிழர்கள்தான், இந்தியத் தமிழர்கள் அல்ல! போர்வை போர்க்க வேண்டிய தேவை எமக்கில்லை.
துரோகிகள் என்று வேறு பட்டம் சூட்டியுள்ளீர்கள். நாங்கள் காக்கை வன்னிய இனம் இல்லை. ஆனால் நீங்கள் எட்டப்ப நாயக்கர் இனம் என்பது ஈழத் தமிழருக்குத் தெரியாது. நீங்கள் புலிகளிடமும், ஏகாதிபத்தியத்திடமும் பணம் பெற்றுக் கொண்டு பணியாற்றிய வரலாறு மக்களுக்குத் தெரியாது. மேடைகளில் அழுது வடிந்து தமிழ் இன உணர்வாளராகக் காண்பித்தே 20 ஆண்டுகளை ஓட்டியுள்ளீர்கள். ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகிய காலம் தொட்டு நீங்கள் ஈ.என்.டி.எல்.எப். க்கு எதிராக பல தீயச் செயல்களைச் செய்துள்ளீர்கள்.
எங்கள் இனத்தின் மீது பயணம் செய்து அவர்களைக் கொலைக் களத்துக்கு அனுப்பி தேர்தலில் வெற்றி பெற முயற்சித்து அதிலும் தோல்வி கண்டது போதும். ஈழத் தமிழரது பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் கேரளாவுக்கு முட்டை, காய்கறி போவதைத் தடுத்து தமிழ்நாட்டுக்கு உணர்வைக் காண்பித்து தமிழனாக முயற்சி செய்யவும்.
நீங்கள் செய்துவிட்ட இந்தியத் துரோகமும், ஈழத் துரோகமும் பற்றி விலாவாரியாக ஆதாரங்களுடன் வெளியிடுகிறோம் விரைவில் கண்டுகொள்ளவும்.
தனது நிஜப் பிறந்தநாளை மறைத்து... புத்தாண்டு பிறக்கும் ஜனவரி 1-ந் தேதியையே பிறந்த நாளாகக் கொண்டாடும் வழக்கத் தைக் கொண்ட... சபலச்சாமியார் நித்யானந்தா... இந்த ஜனவரி ஒன்றிலும் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில்... ’ஹேப்பி பர்த்டேவை கோலாகலமாகக் கொண்டாடினார்.
பிறந்த நாள் அன்று நடக்கும் விஷேச பாத பூஜை யின்போது.... நித்தி யின் பிரதான சிஷ்யர்கள் மட்டுமே அவரை நெருங்கிச் சென்று பூஜை பண்ண முடியும்.� நித்தி ஆன்மீக பிஸ் னஸுக்கு வந்த இந்த 7 ஆண்டு களில்... முதல்முறையாகவும் பகிரங்கமாகவும்... நித்தியின் பிரதான சீடர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு..... தானே முதல் ஆளாக பாதபூஜை செய்து... தான் முதலாவது இடத்துக்கு வந்துவிட்டதை ஆசிரமத் தரப்புக்கு அப் பட்டமாக உணர்த்தியிருக்கிறார் நடிகை ரஞ்சிதா.
அதோடு நித்யானந்தாவை கடவுளாகவே பாவித்து... பரபர நிலையில் அவருக்கு ரஞ்சிதா தீப ஆராதனை காட்டி வழிபட... அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நித்தியின் பக்தர்கள் தரிசித்து மகிழ்ந் தார்கள்.
"நித்யானந்தாவோடு ஆபாச சி.டி.யில் இருக்கும் பெண் நானல்ல'’என வெளியே சொல்லிக் கொண்டிருக்கும் ரஞ்சிதாவோடு... எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆசிரமத்தில் ஆனந்தமாய் சஞ்சாரம் செய்துகொண்டிருக்கிறார் நித்தி.� இது அவரது நெருங்கிய சிஷ்ய கோடிகளுக்குத்தான் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தி யிருக்கிறது.
நித்தியின் முகத்திரையைக் கிழித்த மாஜிசீடர் லெனின் தர்மானந்தா மீது... பாலியல் புகார் கொடுத்த சூட்டோடு... நித்தியின் ஆசிரமத்திலேயே தஞ்சமடைந்து... பர்சனல் சேவையில் ரஞ்சிதா இறங்கியிருக்கும் இந்த சூழ்நிலையில்...
கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவின் டி.ஜி.பி.யான குரு பிரசாத்திடம்... நித்தி- ரஞ்சிதா விவகாரம் குறித்தும் ரஞ்சிதாவின் இந்த குபீர் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நாம் கேட்டோம்.
""நாங்கள் நித்யானந்தாவை கஸ்டடியில் வைத்து விசாரித்த போதே...� நடிகை ரஞ்சிதாவோடு தனக்கு ஒரு வருடமாக உடல்ரீதி யான தொடர்பு இருப்பதாக ஒத்துக்கொண்ட நித்யானந்தா... மேலும் 15 பெண்களுடன் தனக்கு சரீர பந்தம் இருந்த தையும் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார். அதோடு தனக்கு அமாவாசை, பௌர்ணமி.. போன்ற நாட்களில் ஏற்படும் உடல் எழுச்சியைத் தணிக்க... கண்டிப்பாக பெண்சரீரம் தேவைப்படும் என்றும் கூச்சமில்லாமல் நித்யானந்தா சொல்லி யிருக்கிறார். இந்த ஆதாரமெல்லாம் எங்களிடம் பத்திரமாக இருக்கிறது.
இன்னொன்று... லெனின் தர்மானந்தா ஆசிரமத்தில் இருந்த காலகட்டத்தில்.. தன்னிடம் தப்பாக நடக்க முயன்றதாக ரஞ்சிதா இப்போது திடீரென குற்றம் சாட்டியிருக்கிறார். லெனின் தர்மானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேறி... நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பான சி.டி.யை. வெளியிட்டபிறகு...� 2010 ஜூன் 21-ல் சென்னையில் வைத்து நாங்கள் ரஞ்சிதாவை விசாரித்தோம். அப்போது அவர் லெனின் தர்மானந்தா தன்னை மிரட்டியதாகவோ... தனக்கு டார்ச்சர் கொடுத்த தாகவோ எங்களிடம் சொல்லவே இல்லை. அதே சமயம்... நித்யானந்தா என்னோடு பேசிக்கொண்டு தொடர்பில்தான் இருக்கிறார் என்றும்.... மீடியாக்களிடம் பேசவேண்டாம் என்று அவர் தன்னை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் எங்களிடம் ரஞ்சிதா� தெரிவித்தார். ஆக நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருப்பதையும்... நித்யானந்தா சொல்வதையெல்லாம் அப்படியே கேட்பவராக ரஞ்சிதா இருப்பதையும் நாங்கள் ஆதாரப் பூர்வமாகத் தெரிந்துகொண்டோம்''’என்று முடித்துக் கொண்டார்.
நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்? என நாம் அவரது தரப்பிலேயே துருவியபோது... ரஞ்சிதா தவிர மற்றொரு பிரபல நடிகையும் அந்தப் பட்டியலில் இருப்பது தெரிய வந்தது. அவர் யார்?
நித்தியின் சீடர் ஒருவரே 2008-ல் நடந்த அந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார். அதன்படி...
2008-ல், சென்னை ஆவடியில் இருக்கும்.. அ.தி.மு.க. எம்.பி. ஒருவருக்குச் சொந்தமான கல்லூரியில் ‘நித்யானந்த பூரண முகாம்’ என்ற பெயரில் 4 நாள் தியான வகுப்பு நடந்தது.� நான்கு நாள் வகுப்பும் நிறைவடைந்ததும்... கடைசி நாள் இரவு... தமிழக தியான பீட பொருளாளர் ராமநாதன் வீட்டில் நித்தி தங்கினார்.
இந்த ராமநாதனுக்கு ஒரு மினி சைஸ் வரலாறு உண்டு. அதாவது 2003-ல் இருந்து 2007-வரை தன்னுடைய எலக்ட்ரால் இண்டியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி மூலம்தான் வெளிநாடுகளுக்கு கடவுள் சிலைகளை ஏற்றுமதி செய்துவந்தார் ராமநாதன். அதற்குப் பிறகு ‘நித்யானந்தாவே தன் தம்பியான நித்தேஸ்வ ரானந்தா மேற்பார்வையில் ஏற்றுமதியைத் தொடங்கினார்.
இது ஒருபுறமிருக்கட்டும். ராமநாதன் வீட்டில் இரவு தங்கிய நித்தி... அந்தக் காலை நேரத்தில் அங்கிருந்து ஹூண்டாய் அக்காய் காரில் கிளம்பினார். அந்தக் காரை ஓட்டியவர் ராமநாதன். இந்தக் காருக்குப் பாதுகாப்பாக 2 கார்கள் அதன் பின்னால் சென்றன. அந்தக் கார் சரியாக காலை 8 மணிக்கு பெசன்ட் நகர் பீச்சை அடைந்தது.
பீச்சில் வாக்கிங் போவதும்... கடலின் அழகை ரசிப்பதும் நித்திக்கு சுகமான விசயங்கள். அங்கு காரில் இருந்து இறங்கிய நித்தி... தன் செல்போனில்� 5 நிமிடம் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டே நடந்தார். பின்பு உற்சாகமாக..’வாங்க போகலாம்’ என எல்லோரையும் பார்த்துச்சொல்லிவிட்டு.. தான் வந்த காரிலேயே ஏறினார். அங்கிருந்து கிளம்பிய கார் மறுபடியும் ராமநாதன் வீட்டுக்குப் போக வில்லை. அதே பெசன்ட் நகர் பகுதியில் இருக்கும்... ஒரு அபார்ட்மெண்ட்டுக்குப் போய் நின்றது.
பொதுவாக நித்யானந்தா யார் வீட்டுக்குப்போனாலும் அங்கு ஒரு பெரிய கூட்டம் திரட்டப்பட்டிருக்கும்.� பூரணகும்ப மரியாதை கொடுத்துதான் வீட்டுக்குள் நித்தியை அழைப்பார்கள். ஆனால் இங்கு இப்படி எதுவும் நடக்கவில்லை.
பின்னால் வந்த இரண்டு காரையும் கேட்டுக்கு வெளியே நிறுத்திக்கொள்ளச் சொல்லிவிட்டு... அவரது கார் மட்டும் கேட்டுக்குள் நுழைந்தது. ராமநாதன் உள்ளே காரை நிறுத்திவிட்டு... உட னடியாக வெளியே வந்து மற்றவர் களுடன் பேசிக்கொண்டிருந்தார். "சாமி எங்கே? அவர் தனியா எந்த வீட்டுக்கும் போகமாட்டாரே? யாரைப் பார்க்கப் போயிருக்கார்?'’ என சக சீடர்கள் குழம்பினர்.
ஒரு முக்கால் மணி நேரம் கழித்து... நித்யானந்தா சிரித்தபடியே பூரிப்பாக வந்தார். அவரை கார்வரை வழியனுப்பக் கூட அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.
அந்த வீடு யார் வீடு தெரியுமா?
"புதுநெல்லு புதுநாத்து' கண்ட பிரபல நடிகையின் வீடு. நித்தி அந்த வீட்டுக்கு ஏன் போனார் என்று யோசித்த அவரது பிரதான� சீடர்களுக்கு... அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது; அன்று அமாவாசை!
இதேபோல் இன்னொரு சம்பவம்.
2009 -ஜூனில் தாம்பரம் அருகே இருந்த ஒரு கல்லூரியில் தியான வகுப்பை நடத்தினார்����������� நித்தி. பொதுவாக இந்த வகுப்புகள் நடக்கும் இடத்திலேயே... பயிற்சியாளர்கள் தங்கியிருப்பார்கள். இங்கு நித்தி தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறை... நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட மூன்று பிர பல நடிகைகளுக்கு ஒதுக் கப்பட்டிருந்தது.
ரஞ்சிதா அல்லாத அந்த இருவரில் ஒருவர் கணவரை விவாகரத்து பண்ணியவர்.� இன் னொருவரோ... பிரிந்த கணவரை சேர்ந்த நேரத்தில்... அவரை காலனிடம் பறிகொடுத்தவர். இந்த இரண்டு நடிகைகளுமே தங்களை� சமூக சேவைகளில் ஈடுபடுத்திக்கொண்டி ருப்பதோடு.. சேனல்களிலும் தலைகாட்டு���� பவர்கள்.
முதல் நாள் தியான வகுப்பு முடிந்து அறையில் தங்கிய இந்த இரண்டு நடிகை�������� களுக்கும் என்ன அதிர்ச்சி அனுபவமோ தெரியவில்லை... மறுநாள் காலை... ரஞ்சிதாவிடம் "எங்களுக்கு இப்படி ஒரு தியான��������� கிளாஸே வேண்டாம். நாங்கள் வருகிறோம்'’������ என குட்பை சொல்லி விட்டுக் கிளம்பிவிட் டார்கள்.
மற்றநாட்களில் எப்படியோ... ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமி நாட்களிலும்... முறுக்கேறி நிற்கும் நித்தியைப் பார்த்து... அவரது ஆசிரமத்தின் பெண் சந்நியாசினிகள்...� மிரட்சியில் கைபிசைவார்கள்... எந்த நேரத்தில் வேட்டை மிருகம் பாயுமோ என்று.